சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் பெய்த கனமழை பெய்தது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதி கனமழை பெய்தது. இதனால் திரும்பும் திசையெல்லாம் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஒரு நாள் மழைக்கே சென்னை தாக்குப்பிடிக்காத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.