இந்தியாவில் உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க, தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருந்ததாக, அமலாக்கத்துறை குற்றச்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 56 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் நிதி திரட்டி, இந்தியா முழுவதும் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் 29 வங்கிக் கணக்குகள் மூலம் பிஎஃப்ஐ அமைப்பு பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன், சுமார் 94 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
குறிப்பாக, நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை சீா்குலைக்கும் வகையில் பிஎஃப்ஐ அமைப்பு செயல்பட்டு வந்துள்ளதுடன், இந்தியாவில் முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாத கும்பலை உருவாக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கேரளாவின் கண்ணூர் மாவட்டம் நாரத் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டில் பிஎஃப்ஐ அமைப்பு நடத்திய தற்காப்பு கலை பயிற்சி முகாமில் இளைஞர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டதாகவும்,
கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் பிஎஃப்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.