போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தென்மாநில காவல்துறை இயக்குநர்கள் மற்றும் படைத் தலைவர்களின் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
அப்போது, போதைப்பொருளை ஒழிக்க தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், போதைப் பொருட்களுக்கு எதிரான பரப்புரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போதைப்பொருள் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பிற மாநில காவல்துறையின் உதவி தேவை எனறும் கூறினார்.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி சிலர் போதைப்பொருட்களை விற்று வருவதாக தெரிவித்த முதலமைச்சர்,நாமக்கல்லில் வடமாநில கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இணையவழி குற்றங்களை தடுக்க அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், முதலமைச்சர் கூறினார்.