SCO உச்சி மாநாடு : இந்தியா - பாக். இறுக்கத்தை குறைத்தாரா ஜெய்சங்கர்? சிறப்பு கட்டுரை!
May 24, 2025, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

SCO உச்சி மாநாடு : இந்தியா – பாக். இறுக்கத்தை குறைத்தாரா ஜெய்சங்கர்? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமாபாத்தில் நடந்த SCO மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுக்கம் தளர்வதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா,சீனா,ரஷ்யா,பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்த ஆலோசனை செய்வதற்காக ஆண்டுதோறும் SCO உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 23-வது SCO உச்சி மாநாடு, பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில், இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் , கலந்து கொண்டார்.

காஷ்மீர் பிரச்சனை, தீவிரவாதம், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் என இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வெளியுறவு துறை அமைச்சரின் முதல் பாகிஸ்தான் பயணமாக இது இருந்தது.

இந்த உச்சி மாநாட்டின் போது, செவ்வாய்கிழமை இரவு விருந்தில், ஜெய்சங்கரும், பாகிஸ்தான் பிரதமர் சாபஸ் ஷெரீப்பும் அன்புடன் கைகுலுக்கி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டதாகவும், உரையாடியதாகவும் தெரிய வருகிறது. மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தாரையும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இதனிடையே, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வி, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகளை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்தியாவின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் பாகிஸ்தான் விரும்புகிறது.

கடந்த புதன்கிழமை SCO உச்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வ மதிய உணவு விருந்தின்போது, இந்திய- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து, நேர்மறையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.

மாநாடு முடிந்து, இஸ்லாமாபாத்தில் இருந்து கிளம்பும் முன், விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்கு நன்றி தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இருநாட்டு உறவு சீர் பெறுவதற்கான ஆரம்ப அடையாளமாக இருந்தது என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே முறையான இருதரப்பு சந்திப்பு நடைபெறவில்லை என்றாலும் இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகை உறைந்துபோன ஒரு பனிக்கட்டியை உடைக்கும் என்று தான் நம்புவதாக பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் ஐநா சபையில், கடுமையாக குற்றச் சாட்டுக்களை இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவர் மீது ஒருவர் வைத்தனர். தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் சபாஸ் ஷெரிப், இந்தியாவுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்திய வெளியுறவு அமைச்சகமும் தக்க பதிலடி தந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் இனி சாத்தியமற்றதாகவே தெரியும் சூழலில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு பாகிஸ்தான் சென்று திரும்பி இருக்கிறார். ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் இறுக்கத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: IndiapakistanJaishankarExternal Affairs Minister S JaishankarSCO conferenceeconomic development
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் அமைப்பின் ஹிட் லிஸ்ட் பயங்கரவாதி : சின்வார் கொல்லப்பட்டது எப்படி? – சிறப்பு கட்டுரை!

Next Post

வாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் – பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்!

Related News

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் 80-வது பிறந்தநாள் விழா : ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் வாழ்த்து!

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி – ஜெய்சங்கர்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? : சீமான் கேள்வி!

ஜப்பான் : இந்திய பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்த எம்பிக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் நவீன வெண்குடை வேந்தராக உருவெடுத்துள்ளார் : ஜெயக்குமார் விமர்சனம்!

பக்ரைன் சென்றடைந்த எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு!

மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!

கர்நாடக மாநிலம் : பாலியல் குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு – மீண்டும் கைது!

பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதையுடன் நடத்தும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் – பிரதமர் மோடி

கனடா : இந்திய மாணவர் சேர்க்கை 31% குறைவு!

நாகர்கோவில் அருகே கனமழை : கார் மீது விழுந்த மின் கம்பம்!

டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தற்காலிக தடை!

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை : தயார் நிலையில் நகராட்சி நிர்வாகம்!

டென்மார்க் : ஓய்வு பெறும் வயது 70 ஆக அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies