SCO உச்சி மாநாடு : இந்தியா - பாக். இறுக்கத்தை குறைத்தாரா ஜெய்சங்கர்? சிறப்பு கட்டுரை!
Jan 24, 2026, 12:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

SCO உச்சி மாநாடு : இந்தியா – பாக். இறுக்கத்தை குறைத்தாரா ஜெய்சங்கர்? சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமாபாத்தில் நடந்த SCO மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுக்கம் தளர்வதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா,சீனா,ரஷ்யா,பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்த ஆலோசனை செய்வதற்காக ஆண்டுதோறும் SCO உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 23-வது SCO உச்சி மாநாடு, பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில், இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் , கலந்து கொண்டார்.

காஷ்மீர் பிரச்சனை, தீவிரவாதம், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் என இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வெளியுறவு துறை அமைச்சரின் முதல் பாகிஸ்தான் பயணமாக இது இருந்தது.

இந்த உச்சி மாநாட்டின் போது, செவ்வாய்கிழமை இரவு விருந்தில், ஜெய்சங்கரும், பாகிஸ்தான் பிரதமர் சாபஸ் ஷெரீப்பும் அன்புடன் கைகுலுக்கி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டதாகவும், உரையாடியதாகவும் தெரிய வருகிறது. மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தாரையும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இதனிடையே, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வி, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகளை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்தியாவின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் பாகிஸ்தான் விரும்புகிறது.

கடந்த புதன்கிழமை SCO உச்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வ மதிய உணவு விருந்தின்போது, இந்திய- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து, நேர்மறையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.

மாநாடு முடிந்து, இஸ்லாமாபாத்தில் இருந்து கிளம்பும் முன், விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்கு நன்றி தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இருநாட்டு உறவு சீர் பெறுவதற்கான ஆரம்ப அடையாளமாக இருந்தது என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே முறையான இருதரப்பு சந்திப்பு நடைபெறவில்லை என்றாலும் இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகை உறைந்துபோன ஒரு பனிக்கட்டியை உடைக்கும் என்று தான் நம்புவதாக பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் ஐநா சபையில், கடுமையாக குற்றச் சாட்டுக்களை இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவர் மீது ஒருவர் வைத்தனர். தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் சபாஸ் ஷெரிப், இந்தியாவுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்திய வெளியுறவு அமைச்சகமும் தக்க பதிலடி தந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் இனி சாத்தியமற்றதாகவே தெரியும் சூழலில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு பாகிஸ்தான் சென்று திரும்பி இருக்கிறார். ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் இறுக்கத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: economic developmentIndiapakistanJaishankarExternal Affairs Minister S JaishankarSCO conference
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் அமைப்பின் ஹிட் லிஸ்ட் பயங்கரவாதி : சின்வார் கொல்லப்பட்டது எப்படி? – சிறப்பு கட்டுரை!

Next Post

வாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் – பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்!

Related News

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மதுராந்தகம்!

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி-நயினார் நாகேந்திரன்

நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள் – டிடிவி தினகரன்

நானும் தினகரனும் ஜெயலலிதாவின் பிள்ளைகள் – EPS

சூரியன் மறைந்து கொண்டு வருகிறது -அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies