ஆசிய பென்காக் சிலாட் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் வந்த வீரர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் கடந்த 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 8வது ஆசிய பென்காக் சிலாட் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி, 2 தங்கம், 2 வெள்ளி, 12 வெண்கலத்துடன் ஐந்தாவது இடத்தை தக்க வைத்தது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 36 வீரர்கள் பென்காட் சிலாட் போட்டியில் கலந்து கொண்டனர். ஆசிய சண்டை பிரிவில் திருச்சியை சேர்ந்த கமலேஷ் 95 கிலோ எடை பிரிவிலும், அரவிந்த பிரகாஷ் 90 கிலோ எடை பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
இந்நிலையில், பதக்கங்கள் வென்று விமானம் மூலம் திருச்சி வந்த வீரர்களுக்கு பயிற்சியாளர் மற்றும் பெற்றோர், வீரர் வீராங்கனைகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.