ரத்தன் டாடா உயில் : யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்கும்? - சிறப்பு கட்டுரை!
Oct 30, 2025, 05:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரத்தன் டாடா உயில் : யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்கும்? – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, தனது உயிலை நிறைவேற்றுபவர்களாக நான்கு பேர்களை நியமித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 9ம் தேதி, தனது 86 வது வயதில், ரத்தன் டாடா மரணமடைந்த பிறகு அவரது ஒன்று விட்ட சகோதரர் நோயல் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், தனது ஒன்று விட்ட சகோதரிகளான ஷீரின் மற்றும் டீன்னா ஜெஜீபாய், வழக்கறிஞர் டேரியல் கம்பாட்டா மற்றும் தனது நெருங்கிய நண்பர் மெஹ்லி மிஸ்திரி ஆகியோரை தனது உயிலை நிறைவேற்றுபவர்களாக ரத்தன் டாடா நியமித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நான்கு பேரில் ஒருவரான, டாடாவின் நம்பிக்கைக்குரிய மெஹ்லி மிஸ்திரி இரண்டு முக்கிய டாடா அறக் கட்டளைகளான ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளைகளில் அறங்காவலராக இருந்திருக்கிறார். இந்த இரண்டு அறக் கட்டளைகளும் , டாடா சன்ஸ் நிறுவனத்தில் 52 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.

மேலும், ப்ரீச் கேண்டி மருத்துவமனை, டாடா இந்திய சமூக அறிவியல் நிறுவனம் மற்றும் மேம்பட்ட கால்நடை பராமரிப்பு அறக்கட்டளை குழுவிலும் மிஸ்திரி பணியாற்ற்றி வருகிறார்.

டாடாவின் ஒன்று விட்ட சகோதரிகளான ஷீரின் மற்றும் டீன்னா ஜெஜீபாய், அறப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டீன்னா ஏற்கெனவே , 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், டாடா அறக்கட்டளை குழுவில் பணியாற்றி இருக்கிறார்.

முன்னதாக டாடாவின் இரண்டு அறக்கட்டளைகளிலும் அறங்காவலராக இருந்த கம்பாடா ஏறக்குறைய 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு தான் டாடா அறக் கட்டளை பதவிக்குத் திரும்பி இருக்கிறார்.

ரத்தன் டாடாவின் உயிலை தான் தயாரிக்கவில்லை என்றும், டாடா மறைவுக்குப் பிறகே உயிலைப் பார்ப்பதாகவும் கூறியிருக்கும் கம்பாடா, உயிலின் உள்ளடக்கம் பற்றி ரத்தன் டாடாவுக்கு ஆலோசனை ஏதும் வழங்கவில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்குகள் வைத்திருந்தார். டாடா குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் டாடா சன்ஸ் பங்கின் மதிப்பு மட்டும் 16.71 லட்சம் கோடி ரூபாயாகும்.

இந்த கணக்கின் படி,ரத்தன் டாடா 7900 கோடி ரூபாய் நிகர மதிப்புடைய பணக்காரராக இருந்தார் என்று ஹுருன் அறிக்கை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

உயில் நிறைவேற்றப்படாத வரை, இறந்த நபரின் சொத்துகளைப் பராமரிக்கும் பொறுப்பு உயிலை நிறைவேற்றுபவர்களுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

Tags: awyer Dariel KambataTata Trusts.Tata Group chairman Ratan TataTata appointed four executorsSheerinDeanna Jejeebhai
ShareTweetSendShare
Previous Post

கரூர் அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை!

Next Post

கனடாவிற்கு ஆதரவு : இரட்டை நிலைப்பாட்டால் திணறும் அமெரிக்கா – சிறப்பு கட்டுரை

Related News

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

SIR – நடைமுறைகள் என்ன?

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies