ரத்தன் டாடா உயில் : யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்கும்? - சிறப்பு கட்டுரை!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரத்தன் டாடா உயில் : யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்கும்? – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மறைந்த டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, தனது உயிலை நிறைவேற்றுபவர்களாக நான்கு பேர்களை நியமித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 9ம் தேதி, தனது 86 வது வயதில், ரத்தன் டாடா மரணமடைந்த பிறகு அவரது ஒன்று விட்ட சகோதரர் நோயல் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், தனது ஒன்று விட்ட சகோதரிகளான ஷீரின் மற்றும் டீன்னா ஜெஜீபாய், வழக்கறிஞர் டேரியல் கம்பாட்டா மற்றும் தனது நெருங்கிய நண்பர் மெஹ்லி மிஸ்திரி ஆகியோரை தனது உயிலை நிறைவேற்றுபவர்களாக ரத்தன் டாடா நியமித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நான்கு பேரில் ஒருவரான, டாடாவின் நம்பிக்கைக்குரிய மெஹ்லி மிஸ்திரி இரண்டு முக்கிய டாடா அறக் கட்டளைகளான ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளைகளில் அறங்காவலராக இருந்திருக்கிறார். இந்த இரண்டு அறக் கட்டளைகளும் , டாடா சன்ஸ் நிறுவனத்தில் 52 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.

மேலும், ப்ரீச் கேண்டி மருத்துவமனை, டாடா இந்திய சமூக அறிவியல் நிறுவனம் மற்றும் மேம்பட்ட கால்நடை பராமரிப்பு அறக்கட்டளை குழுவிலும் மிஸ்திரி பணியாற்ற்றி வருகிறார்.

டாடாவின் ஒன்று விட்ட சகோதரிகளான ஷீரின் மற்றும் டீன்னா ஜெஜீபாய், அறப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டீன்னா ஏற்கெனவே , 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், டாடா அறக்கட்டளை குழுவில் பணியாற்றி இருக்கிறார்.

முன்னதாக டாடாவின் இரண்டு அறக்கட்டளைகளிலும் அறங்காவலராக இருந்த கம்பாடா ஏறக்குறைய 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு தான் டாடா அறக் கட்டளை பதவிக்குத் திரும்பி இருக்கிறார்.

ரத்தன் டாடாவின் உயிலை தான் தயாரிக்கவில்லை என்றும், டாடா மறைவுக்குப் பிறகே உயிலைப் பார்ப்பதாகவும் கூறியிருக்கும் கம்பாடா, உயிலின் உள்ளடக்கம் பற்றி ரத்தன் டாடாவுக்கு ஆலோசனை ஏதும் வழங்கவில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்குகள் வைத்திருந்தார். டாடா குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் டாடா சன்ஸ் பங்கின் மதிப்பு மட்டும் 16.71 லட்சம் கோடி ரூபாயாகும்.

இந்த கணக்கின் படி,ரத்தன் டாடா 7900 கோடி ரூபாய் நிகர மதிப்புடைய பணக்காரராக இருந்தார் என்று ஹுருன் அறிக்கை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

உயில் நிறைவேற்றப்படாத வரை, இறந்த நபரின் சொத்துகளைப் பராமரிக்கும் பொறுப்பு உயிலை நிறைவேற்றுபவர்களுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

Tags: awyer Dariel KambataTata Trusts.Tata Group chairman Ratan TataTata appointed four executorsSheerinDeanna Jejeebhai
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை!

Next Post

கனடாவிற்கு ஆதரவு : இரட்டை நிலைப்பாட்டால் திணறும் அமெரிக்கா – சிறப்பு கட்டுரை

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies