தமிழகம், திராவிட நாடா ? தமிழ்நாடா ? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் விவாதம் செய்ய தயாரா..? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையில் எத்தனை பேர் தமிழர்கள் உள்ளனர் என கேள்வி எழுப்பினார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு, திராவிட நாடா ? தமிழ்நாடா ? என அன்பில் மகேஸ் விவாதம் செய்ய தயாரா என்றும் சீமான் சவால் விடுத்தார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு திமுக பயப்படுவதாக தெரிவித்த அவர், நேர்மையான நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் திமுக எதைக்கண்டும் பயப்பட தேவையில்லை எனறும் சீமான் தெரிவித்தார்.