எல்லையில் படைகளைக் குறைக்கவும், ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கவும் இந்தியா – சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பின்பேரில் வரும் 22-ம் தேதி நடைபெறும் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை கசான் செல்கிறார் என தெரிவித்தார்.
இந்த மாநாடு கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாநாடு எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு சீனா ஊடுருவல் தொடர்பாக எழுந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், எல்லையில் படைகளைக் குறைக்கவும், ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கவும் இந்தியா – சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோதமாக ரஷ்ய ஆயுதப்படைகளில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களில் எஞ்சியுள்ள 20 பேரை விடுவிக்க உரையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.