பாரதத்திற்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இன்று காவல்துறை நினைவேந்தல் தினத்தில் பாரதத்திற்காக தங்கள் விலைமதிப்பற்ற உயிரை தியாகம் செய்த சிங்க நெஞ்சம் மற்றும் அச்சமற்ற காவலர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வணக்கத்தை தமிழக பாஜக சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தும் அதே வேளையில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக அனைத்து காவல்துறையினருக்கும் எங்கள் இதயம் உரித்தானது. ஜெய் ஹிந்த் என அண்ணாலை தெரிவித்துள்ளார்.