தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால், அப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, தணிக்கை சான்று அளிக்கப்பட்டு தங்கலான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி விட்டபின், ஓடிடியில் வெளியிட தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டார்.