திமுக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் பெரும்பாலான அமைச்சர்கள் ஊழல் புரிவதாக தெரிவித்தார்.
உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியதுதான் ஸ்டாலின் செய்த ஒரே ஒரு சாதனை என்றும் அவர் கூறினார். அதிமுகவில்தான் சாதாரண தொண்டன் கூட உயர் பதவிக்கு வர முடியும் என்றும், அவர் தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் எப்போதும் ஒரு செங்கல்லை தூக்கிக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி மக்களை ஏமாற்றுவதாகவும், கூட்டணி பற்றி தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் கூற முடியும் தெரிவித்தார்.
திமுக கூட்டணிக்குள் சலசலப்பு எற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்தளவு பெய்த மழைக்கே சென்னை மாநகரம் தாக்குப்பிடிக்கவில்லை என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.