மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாயை போலீஸார் கைப்பற்றி, 4 பேரை கைது செய்தனர்.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதால், தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி, புனே கேட் சிவபூர் சுங்கச்சாவடி பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் இருந்தபோது கணக்கில் வராத 5 கோடி ரூபாயுடன் வந்த சொகுசு காரை மடக்கி பிடித்து பணத்தைக் கைப்பற்றினர். அதில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கமான எம்எல்ஏவுக்கு சொந்தமானது என சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.