தொழில் போட்டியால் பயங்கரம்! : இந்திய வம்சாவளி தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது!
Sep 20, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தொழில் போட்டியால் பயங்கரம்! : இந்திய வம்சாவளி தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது!

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 12:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவிஸ்நாட்டு கோடீஸ்வரரின் மகளான வசுந்தரா ஓஸ்வால் உகாண்டாவில் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யார் இந்த வசுந்தரா ஓஸ்வால் ? எதற்காக உகாண்டாவில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுவிஸ் நாட்டு தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால், இந்திய தொழிலதிபர் அபய் குமார் ஓஸ்வாலின் மகனாவார். பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா ஓஸ்வால் ஆகியோரின் 26 வயது மகள் வசுந்தரா ஓஸ்வால்.

ஓஸ்வால் அக்ரோ மில்ஸ் மற்றும் ஓஸ்வால் கிரீன்டெக் நிறுவனரான பங்கஜ் ஓஸ்வால், குளோபல் பெட்ரோ கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், உரங்கள் மற்றும் சுரங்கத் தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தனால் உற்பத்தி ஆலையின் தலைவராக இருக்கும் 26 வயதான வசுந்தரா ஓஸ்வால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவிஸ் தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வாலின் மகளாவார். ஓஸ்வால் குழுமத்தின் உலகளாவிய விரிவாக்கத்தில், வசுந்தரா ஓஸ்வாலின் பங்கு முக்கியமானது.

குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ஓஸ்வால் குழுமத்தின் வணிக சாதனைகளுக்காக கடந்த ஆண்டுக்கான குளோபல் யூத் ஐகான் விருது வசுந்தரா ஓஸ்வாலுக்கு வழங்கப் பட்டது.

தனது இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பின்போது, வசுந்தரா ஓஸ்வால், PRO இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியதோடு, தற்போது அதன் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

உகாண்டாவில் ஓஸ்வால் குழுமத்தின் மது ஆலையில் இருந்து ஆயுதம் ஏந்திய 20 மர்ம நபர்களால் வசுந்தரா ஓஸ்வால் கடத்தப்பட்டதாகவும், கொலைக் குற்றச்சாட்டின் கீழ் 20 நாட்களுக்கும் மேலாக சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வசுந்தரா ஓஸ்வால் மீதான குற்றச்சாட்டுகளை ஓஸ்வால் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவிஸ் தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால், தனது மகள் வசுந்தரா ஓஸ்வால் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் உகாண்டாவில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டதாக ஐநா சபையில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

முன்னதாக, உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனிக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், தங்கள் குடும்பத்திடம் இருந்து 200,000 அமெரிக்க டாலரை கடனாக பெற்றதாகவும் வசுந்தரா மீது அந்த ஊழியர் பொய் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருப்பதாகவும், பங்கஜ் ஓஸ்வால் தெரிவித்துள்ளார். வசுந்தராவால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் தான்சானியாவில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தான், வசுந்தரா இக்கட்டான சூழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், குளிக்காமல், உடை மாற்றாமல், ஷூக்கள் நிறைந்த அறையில் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், வசுந்தரா ஓஸ்வாலின் இன்ஸ்டா பக்கத்தில் அவரது சகோதரி ரிடி ஓஸ்வால் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், கொலை போன்ற கொடூரமான குற்றங்களில் குற்றவாளிகளுக்கான சிறையில் இரண்டரை வாரங்களுக்கும் மேலாக உகாண்டாவில் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும்,. எந்த ஆதாரமும் இல்லாமல், காவலில் வைக்க எந்த சரியான காரணமும் இல்லாமல் வசுந்தரா ஓஸ்வால் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

உகாண்டாவில், 90 மணிநேரம் காவலில் வசுந்தரா ஓஸ்வால் இருந்தபோது எடுக்கப்பட்டதாக ரிடி ஓஸ்வால் ஒரு ஆடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.

நிறுவனத்தின் வழக்கறிஞர் ரீட்டா நகாபிரே உட்பட பல ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவலில் வைக்கப்பட்ட பிறகு வசுந்தரா ஓஸ்வால் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதி மறுக்கப் பட்டதாக அவரது சகோதரி இன்ஸ்ட்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.நா. சபை விரைவில் நல்ல தீர்ப்பை வழங்க பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். உகாண்டாவில் தொழில் போட்டி காரணமாக, தமது சகோதரி சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ரிடி ஓஸ்வால் கூறியுள்ளார்.

Tags: Terrified by business competition! : Daughter of Indian-origin businessman arrested in Uganda!
Share
Tweet
SendShare
Previous Post

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்! :

Next Post

பழுதான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies