மதுரையில் திமுக கூட்டணிக்குள் ஏற்கனவே புகைச்சல் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் மூர்த்தியின் கருத்துக்கு எதிராக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, விளாங்குடி, கூடல் நகர், ஆனையூர், செல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்புகள் ஏரி போல் காட்சியளிக்கின்றன. இ
ந்த மழை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மூர்த்தி, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவு, மழைக்கால தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்பாராத வெள்ளத்தால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை புரிந்து கொள்ள முடியும் எனவும், ஆனால் நிர்வாகத்தின் கவனக்குறைவால் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த பதிவோடு, அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவையும் இணைத்துள்ளார். ஏற்கனவே பட்டா விவகாரத்தில் அமைச்சர் மூர்த்திக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மழை பாதிப்பு தொடர்பாக இருவருக்குள்ளும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது