முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணைமுதலமைச்சர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து மனு அளித்த அஸ்வத்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆளுநர் மீது இனவாதம் தொடர்பான அவதூறுகளை பரப்பி அவரை பணிசெய்ய விடாமல் தடுப்பதாக கூறினார்.
மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதை பிரச்னையாக்கும் முதலமைச்சர் மீதும், துணைமுதலமைச்சர் மீதும் குற்றவியல் வழக்கு தொடர அனுமதிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்திருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தேசவிரோதமும், பிரிவினை வாதமும் திமுகவின் குணம் எனவும், பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு தான் நாட்டில் மதக்கலவரங்கள் குறைந்திருப்பதாகவும் கூறினார்.