கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக பசுமை பூங்காவில் மழைநீர் தேங்கியது.
பாலாஜி நகரில் சுமார் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமை பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூங்காவில் 3 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியது.
இதனால் பூங்காவில் குழந்தைகள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. சிறுவர்கள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் நீச்சலடித்து விளையாடிவரும் நிலையில், தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.