டெல்லியில் பிரதமர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
2 நாள் பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது பாதுகாப்பு, திறன் மேம்பாடு, நகர்ப்புற இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை இரு நாட்டு பிரதிநிதிகளும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போர் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் கவலை அளிப்பதாக கூறினார். பிரச்னைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்று கூறிய பிரதமர் மோடி, அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய இந்தியா தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.