ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்கும் படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை, திமுகவுடன் தொடர்புப்படுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
திமுகவை களங்கம் ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமியின் பதிவு இருப்பதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரி, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை
திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவரது பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.