உக்ரைனுக்கு ஆயுதங்கள், ரஷ்யாவை மிரட்டும் தென்கொரியா - சிறப்பு கட்டுரை!
Sep 11, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள், ரஷ்யாவை மிரட்டும் தென்கொரியா – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 25, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவுக்காக உக்ரைனில் போர்புரிய வட கொரியா தன் வீரர்களை அனுப்பியதற்குப் பதிலடியாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று தென்கொரியா எச்சரித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வடகொரியாவும் ரஷ்யாவும் கடந்த இரண்டு வருடங்களாக தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றன.

கடந்த ஜூன் மாதம், இரு நாடுகளும் தாக்கப்பட்டால் உடனடி ராணுவ உதவியை வழங்குவதற்கான அனைத்து வழிகளையும் இருநாடுகளும் பயன்படுத்த வேண்டும் என்ற பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இதனை தொடர்ந்து, உக்ரைன் போரில் உதவுவதற்காக வடகொரியா 1,500 சிறப்பு அதிரடிப் படை வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாக தென் கொரிய உளவு அமைப்பு தகவல் வெளியிட்டிருந்தது. அதே வேளையில், கூடுதலாக, 10,000 வடகொரியா வீரர்கள் ரஷ்ய படையுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட ஆயத்தமாகி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி இருந்தார்.

உக்ரைன் போரில் உதவுவதற்குப் பிரதிபலனாக வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை ரஷ்யா வழங்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என வடகொரியா மிரட்டி வரும் நிலையில், ரஷ்யாவின் அதிநவீன அணு ஆயுதங்கள் கிடைத்தால் நிலைமை விபரீதமாகும் என தென் கொரியா கருதுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, தென் கொரியாவுக்கான ரஷ்ய தூதர் ஜார்ஜி ஜினோவியேவ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, தென் கொரியா வெளியுறவு துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி,தென் கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் ஹாங் கியூனை சந்தித்த ரஷ்ய தூதர், இது எந்த விதத்திலும் தென் கொரியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரானது அல்ல என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலும், வடகொரியா படைகளை அனுப்புவதையும், ஆயுதங்கள் மாற்றப்படுவதையும் ஒரே குரலில் வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்துள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள வடகொரியா படைகள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என தென்கொரியா வலியுறுத்தியுள்ளது. மேலும், வடகொரியாவுக்கு உயர் தொழில்நுட்ப அணு ஆயுதங்கள் , ஏவுகணைகள் ஆகியவற்றை ரஷ்யா வழங்கும் பட்சத்தில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றும் தென் கொரியா, ரஷ்யாவை கடுமையாக எச்சரித்துள்ளது.

Tags: weapons to ukrainesouth korea warningrussiaUkrainenorth koreasouth Korea
Share
Tweet
SendShare
Previous Post

இபிஎஸ்க்கு எதிராக திமுக தொடர்ந்த மான நஷ்ட வழக்கு – ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

“விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டி வாருங்கள்” – மதுரையில் தவெக கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies