உக்ரைனுக்கு ஆயுதங்கள், ரஷ்யாவை மிரட்டும் தென்கொரியா - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள், ரஷ்யாவை மிரட்டும் தென்கொரியா – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 25, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவுக்காக உக்ரைனில் போர்புரிய வட கொரியா தன் வீரர்களை அனுப்பியதற்குப் பதிலடியாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று தென்கொரியா எச்சரித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வடகொரியாவும் ரஷ்யாவும் கடந்த இரண்டு வருடங்களாக தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றன.

கடந்த ஜூன் மாதம், இரு நாடுகளும் தாக்கப்பட்டால் உடனடி ராணுவ உதவியை வழங்குவதற்கான அனைத்து வழிகளையும் இருநாடுகளும் பயன்படுத்த வேண்டும் என்ற பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இதனை தொடர்ந்து, உக்ரைன் போரில் உதவுவதற்காக வடகொரியா 1,500 சிறப்பு அதிரடிப் படை வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாக தென் கொரிய உளவு அமைப்பு தகவல் வெளியிட்டிருந்தது. அதே வேளையில், கூடுதலாக, 10,000 வடகொரியா வீரர்கள் ரஷ்ய படையுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட ஆயத்தமாகி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி இருந்தார்.

உக்ரைன் போரில் உதவுவதற்குப் பிரதிபலனாக வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை ரஷ்யா வழங்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என வடகொரியா மிரட்டி வரும் நிலையில், ரஷ்யாவின் அதிநவீன அணு ஆயுதங்கள் கிடைத்தால் நிலைமை விபரீதமாகும் என தென் கொரியா கருதுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, தென் கொரியாவுக்கான ரஷ்ய தூதர் ஜார்ஜி ஜினோவியேவ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, தென் கொரியா வெளியுறவு துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி,தென் கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் ஹாங் கியூனை சந்தித்த ரஷ்ய தூதர், இது எந்த விதத்திலும் தென் கொரியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரானது அல்ல என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலும், வடகொரியா படைகளை அனுப்புவதையும், ஆயுதங்கள் மாற்றப்படுவதையும் ஒரே குரலில் வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்துள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள வடகொரியா படைகள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என தென்கொரியா வலியுறுத்தியுள்ளது. மேலும், வடகொரியாவுக்கு உயர் தொழில்நுட்ப அணு ஆயுதங்கள் , ஏவுகணைகள் ஆகியவற்றை ரஷ்யா வழங்கும் பட்சத்தில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றும் தென் கொரியா, ரஷ்யாவை கடுமையாக எச்சரித்துள்ளது.

Tags: weapons to ukrainesouth korea warningrussiaUkrainenorth koreasouth Korea
ShareTweetSendShare
Previous Post

இபிஎஸ்க்கு எதிராக திமுக தொடர்ந்த மான நஷ்ட வழக்கு – ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

“விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டி வாருங்கள்” – மதுரையில் தவெக கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies