செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முட்டை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் சுமார் 1 லட்சம் முட்டைகள் உடைந்து வீணாகின.
நாமக்கல்லில் இருந்து சுமார் 1 லட்சம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த லாரி, அத்திமானம் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து வீணாகின.