மாற்றுத்திறனாளி சிறுமி வரைந்த ஒவியத்தை பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமரும் இணைந்து பெற்றுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலம் வதோதராவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இணைந்து பேரணி மேற்கொண்டனர். அவர்களை காண பொதுமக்களும், மாற்றுத்திறனாளி பெண் குழந்தையும் சாலை ஓரத்தில் காத்திருந்தனர்.
அப்போது, இருவரின் உருவ படங்களை படமாக வரைந்து அவர்களிடம் கொடுக்க மாற்றுத்திறனாளி பெண் குழந்தை முற்பட்டுள்ளார். இந்த ஓவியத்தை பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி கொடுத்தபோது, மகிழ்ச்சியுடன் இரு பிரதமர்களும் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அந்த சிறுமிக்கு கை கொடுத்து இருவரும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த காட்சி பேரணி வந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.