தமிழக அரசை நம்பி பயன் இல்லை : படகுகள் வாங்கிய வேளச்சேரி குடியிருப்புவாசிகள் - சிறப்பு கட்டுரை!
Aug 3, 2025, 07:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசை நம்பி பயன் இல்லை : படகுகள் வாங்கிய வேளச்சேரி குடியிருப்புவாசிகள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 2, 2024, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வேளச்சேரி பகுதி மக்கள் ரப்பர் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

வந்தாரை வாழவைக்கும் பெருமை கொண்ட சென்னையில் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் போதும் வந்தவர்கள் உட்பட அனைவரையும் வெளியேற்றும் ஊராக அமைந்திருக்கிறது. கடந்த கால டிசம்பர் மாதங்கள் ஏற்படுத்திய வெள்ள சேதங்கள் சென்னையில் வசிக்கும் ஒவ்வொருவரின் மனதில் ஆறாத வடுவாக இன்றளவும் பதிந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொள்கிறது. அதிலும் வேளச்சேரி பகுதி மக்களின் உயிர் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. போக்குவரத்து, மின்சாரம், தொலைதொடர்பு என எந்தவித வசதிகளும், அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளும் கிடைக்காமலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

நடப்பாண்டு டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த வேளச்சேரி பகுதி மக்கள், மழை வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையால் ஏற்படும் பாதிப்புகளின் போது அரசு மற்றும் மாநகராட்சியின் உதவியைப் பெற ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு ரப்பர் படகுகள், லைப் ஜாக்கெட்டுகள் என மழை மற்றும் புயால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை முழுமையாக தற்காத்துக் கொள்ளும் பணிகளில் வேளச்சேரி பகுதி இறங்கியுள்ளனர்.

மழை வெள்ள காலங்களில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வேளச்சேரி டான்ஸி நகரில் உள்ள குடியிருப்புவாசிகள் இணைந்து நிதி திரட்டி ரப்பர் படகு மற்றும் லைப் ஜாக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மாநகர மக்கள் அச்சப்படும் சூழல் நிலவும் நிலையில், மக்களின் அச்சத்தைப் போக்கவோ, மழைவெள்ளத்திலிருந்து அவர்களை பாதுகாக்கவோ தமிழக அரசு எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாததே, குடியிருப்புவாசிகளே ரப்பர் படகுகளையும் லைப் ஜாக்கெட்டுகளையும் வாங்கக்கூடிய அவல நிலையை உருவாக்கியுள்ளது.

Tags: chennai floodtamil nadu governmentVelachery floodlife jacketsrubber boats
ShareTweetSendShare
Previous Post

யார் இந்த பிபேக் டெப்ராய்? இந்திய ரயில்வே துறையை மாற்றியமைத்த வித்தகர் – சிறப்பு கட்டுரை!

Next Post

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் : மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம் – சிறப்பு கட்டுரை!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies