தமிழக அரசை நம்பி பயன் இல்லை : படகுகள் வாங்கிய வேளச்சேரி குடியிருப்புவாசிகள் - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசை நம்பி பயன் இல்லை : படகுகள் வாங்கிய வேளச்சேரி குடியிருப்புவாசிகள் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 2, 2024, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வேளச்சேரி பகுதி மக்கள் ரப்பர் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

வந்தாரை வாழவைக்கும் பெருமை கொண்ட சென்னையில் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் போதும் வந்தவர்கள் உட்பட அனைவரையும் வெளியேற்றும் ஊராக அமைந்திருக்கிறது. கடந்த கால டிசம்பர் மாதங்கள் ஏற்படுத்திய வெள்ள சேதங்கள் சென்னையில் வசிக்கும் ஒவ்வொருவரின் மனதில் ஆறாத வடுவாக இன்றளவும் பதிந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொள்கிறது. அதிலும் வேளச்சேரி பகுதி மக்களின் உயிர் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. போக்குவரத்து, மின்சாரம், தொலைதொடர்பு என எந்தவித வசதிகளும், அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளும் கிடைக்காமலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

நடப்பாண்டு டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த வேளச்சேரி பகுதி மக்கள், மழை வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையால் ஏற்படும் பாதிப்புகளின் போது அரசு மற்றும் மாநகராட்சியின் உதவியைப் பெற ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு ரப்பர் படகுகள், லைப் ஜாக்கெட்டுகள் என மழை மற்றும் புயால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை முழுமையாக தற்காத்துக் கொள்ளும் பணிகளில் வேளச்சேரி பகுதி இறங்கியுள்ளனர்.

மழை வெள்ள காலங்களில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வேளச்சேரி டான்ஸி நகரில் உள்ள குடியிருப்புவாசிகள் இணைந்து நிதி திரட்டி ரப்பர் படகு மற்றும் லைப் ஜாக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மாநகர மக்கள் அச்சப்படும் சூழல் நிலவும் நிலையில், மக்களின் அச்சத்தைப் போக்கவோ, மழைவெள்ளத்திலிருந்து அவர்களை பாதுகாக்கவோ தமிழக அரசு எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாததே, குடியிருப்புவாசிகளே ரப்பர் படகுகளையும் லைப் ஜாக்கெட்டுகளையும் வாங்கக்கூடிய அவல நிலையை உருவாக்கியுள்ளது.

Tags: life jacketsrubber boatschennai floodtamil nadu governmentVelachery flood
ShareTweetSendShare
Previous Post

யார் இந்த பிபேக் டெப்ராய்? இந்திய ரயில்வே துறையை மாற்றியமைத்த வித்தகர் – சிறப்பு கட்டுரை!

Next Post

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் : மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம் – சிறப்பு கட்டுரை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies