இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : தமிழர் பகுதிகளில் வெற்றிகளை குவித்த தேசிய மக்கள் சக்தி கூட்டணி - சிறப்பு கட்டுரை!
Aug 15, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : தமிழர் பகுதிகளில் வெற்றிகளை குவித்த தேசிய மக்கள் சக்தி கூட்டணி – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அதிபர் தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் அனுர குமர திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்திருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக சற்று விரிவாக பார்க்கலாம்.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத் தேர்தலில் 159 தொகுதிகளை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 145 தொகுதிகளை கைப்பற்றியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சாதனையை முறியடித்துள்ளது.

அனுர குமராவின் தேசிய மக்கள் சக்தி 68 லட்சத்து 63 ஆயிரத்து 186 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 61.56 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. (NEXT)ஐக்கிய மக்கள் சக்தி 19 லட்சத்து 68 ஆயிரத்து 716 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 17.66 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழரசு கட்சி 2 லட்சத்து 57 ஆயிரத்து 813 வாக்குகளை பெற்றுள்ளதுடன் 7 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.  மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்ற நிலையில், அதனை தவிர்த்து மீதமுள்ள அனைத்து தமிழர் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

மலையக மக்கள் அதிகமாக வாழும் கண்டி, மாத்தாளை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
கடந்த முறை இலங்கை தமிழரசுக் கட்சி வசம் இருந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தை இம்முறை தேசிய மக்கள் கட்சி தன் வசப்படுத்தியுள்ளது.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதன்முறையாக தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான தமிழர் பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ச குடும்பம் இம்முறை நாடாளுமன்ற அரசியல் களத்திலிருந்து அடியோடு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியையே சந்திக்காத டக்ளஸ் தேவானந்தா, இந்த தேர்தலில் முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாக கூறப்படும் நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Tags: Sri Lanka parlimentary electionsri lankaAnura Kumara DissanayakeNational People's Shakti allicance
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் கனமழை – மரம் விழுந்ததில் 4 ஆட்டோக்கள் சேதம்!

Next Post

கேபிள் டிவிக்கு BYE…BYE…வருகிறது BSNL LIVE TV : 500 சேனல்கள் இலவசம் – சிறப்பு கட்டுரை!

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies