இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : தமிழர் பகுதிகளில் வெற்றிகளை குவித்த தேசிய மக்கள் சக்தி கூட்டணி - சிறப்பு கட்டுரை!
Apr 29, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : தமிழர் பகுதிகளில் வெற்றிகளை குவித்த தேசிய மக்கள் சக்தி கூட்டணி – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அதிபர் தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் அனுர குமர திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்திருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக சற்று விரிவாக பார்க்கலாம்.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத் தேர்தலில் 159 தொகுதிகளை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 145 தொகுதிகளை கைப்பற்றியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சாதனையை முறியடித்துள்ளது.

அனுர குமராவின் தேசிய மக்கள் சக்தி 68 லட்சத்து 63 ஆயிரத்து 186 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 61.56 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. (NEXT)ஐக்கிய மக்கள் சக்தி 19 லட்சத்து 68 ஆயிரத்து 716 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 17.66 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழரசு கட்சி 2 லட்சத்து 57 ஆயிரத்து 813 வாக்குகளை பெற்றுள்ளதுடன் 7 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.  மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்ற நிலையில், அதனை தவிர்த்து மீதமுள்ள அனைத்து தமிழர் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

மலையக மக்கள் அதிகமாக வாழும் கண்டி, மாத்தாளை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
கடந்த முறை இலங்கை தமிழரசுக் கட்சி வசம் இருந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தை இம்முறை தேசிய மக்கள் கட்சி தன் வசப்படுத்தியுள்ளது.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதன்முறையாக தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான தமிழர் பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ச குடும்பம் இம்முறை நாடாளுமன்ற அரசியல் களத்திலிருந்து அடியோடு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியையே சந்திக்காத டக்ளஸ் தேவானந்தா, இந்த தேர்தலில் முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாக கூறப்படும் நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Tags: sri lankaAnura Kumara DissanayakeNational People's Shakti allicanceSri Lanka parlimentary election
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் கனமழை – மரம் விழுந்ததில் 4 ஆட்டோக்கள் சேதம்!

Next Post

கேபிள் டிவிக்கு BYE…BYE…வருகிறது BSNL LIVE TV : 500 சேனல்கள் இலவசம் – சிறப்பு கட்டுரை!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies