இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : தமிழர் பகுதிகளில் வெற்றிகளை குவித்த தேசிய மக்கள் சக்தி கூட்டணி - சிறப்பு கட்டுரை!
Sep 12, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : தமிழர் பகுதிகளில் வெற்றிகளை குவித்த தேசிய மக்கள் சக்தி கூட்டணி – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை அதிபர் தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் அனுர குமர திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்திருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக சற்று விரிவாக பார்க்கலாம்.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத் தேர்தலில் 159 தொகுதிகளை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 145 தொகுதிகளை கைப்பற்றியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சாதனையை முறியடித்துள்ளது.

அனுர குமராவின் தேசிய மக்கள் சக்தி 68 லட்சத்து 63 ஆயிரத்து 186 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 61.56 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. (NEXT)ஐக்கிய மக்கள் சக்தி 19 லட்சத்து 68 ஆயிரத்து 716 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 17.66 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழரசு கட்சி 2 லட்சத்து 57 ஆயிரத்து 813 வாக்குகளை பெற்றுள்ளதுடன் 7 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.  மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்ற நிலையில், அதனை தவிர்த்து மீதமுள்ள அனைத்து தமிழர் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

மலையக மக்கள் அதிகமாக வாழும் கண்டி, மாத்தாளை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
கடந்த முறை இலங்கை தமிழரசுக் கட்சி வசம் இருந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தை இம்முறை தேசிய மக்கள் கட்சி தன் வசப்படுத்தியுள்ளது.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதன்முறையாக தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான தமிழர் பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ச குடும்பம் இம்முறை நாடாளுமன்ற அரசியல் களத்திலிருந்து அடியோடு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியையே சந்திக்காத டக்ளஸ் தேவானந்தா, இந்த தேர்தலில் முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாக கூறப்படும் நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Tags: sri lankaAnura Kumara DissanayakeNational People's Shakti allicanceSri Lanka parlimentary election
Share
Tweet
SendShare
Previous Post

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் கனமழை – மரம் விழுந்ததில் 4 ஆட்டோக்கள் சேதம்!

Next Post

கேபிள் டிவிக்கு BYE…BYE…வருகிறது BSNL LIVE TV : 500 சேனல்கள் இலவசம் – சிறப்பு கட்டுரை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies