இந்தியாவின் மற்றொரு அசத்தல் : பாகிஸ்தானை பயமுறுத்தும் LRLACM ஏவுகணை - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் மற்றொரு அசத்தல் : பாகிஸ்தானை பயமுறுத்தும் LRLACM ஏவுகணை – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 20, 2024, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீண்ட தூரம் பயணித்து நிலத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. LRLACM என்னும் அந்த ஏவுகணை பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக இருக்கும் என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள்.

தீப்பிழம்பை கக்கியபடி சிறுத்தையைப் போல் சீறிப்பாயும் இந்த ஏவுகணைதான் இந்தியாவின் சமீபத்திய சாதனை. DRDO எனப்படும் இந்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே ஏவுகணை உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை தயாரித்து வருகிறது.

அந்த வகையில் LRLACM என்னும் புதிய ஏவுகணையை தயாரித்திருக்கிறது. LONG RANGE LAND ATTACK CRUISE MISSILE என்பதன் சுருக்கமே LRLACM. நிலத்தில் இருந்தும் நீரில் இருந்தும் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று நிலத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.

ஒரு டன் எடை கொண்ட LRLACM-ஐ பெங்களூருவில் உள்ள AERONAUTICAL DEVELOPMENT ESTABLISHMENT, BHARAT ELECTRONICS LIMITED மற்றும் ஹைதராபாத்தில் உள்ள BHARAT DYNAMICS LIMITED ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து DRDO தயாரித்துள்ளது.

ஒடிஷாவில் நடைபெற்ற சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது LRLACM ஏவுகணை. திட்டமிடப்பட்ட பாதையில் சரியாக பயணித்து தமது பணியை நிறைவேற்றியது. பல்வேறு உயரங்களிலும் வேகத்திலும் பறக்கும் திறன்பெற்ற LRLACM நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணையை DRDO பரிசோதிப்பது இதுவே முதன்முறை.

அதற்காக அறிவியலாளர்களுக்கும் ராணுவத்துக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், LRLACM-ன் வெற்றி புதிய ராணுவ தளவாட தயாரிப்பை ஊக்கப்படுத்தும் எனக்கூறியுள்ளார்.

ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சீறிப்பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்திருப்பது அண்டை நாடாக இருந்துகொண்டு அவ்வப்போது தொல்லை கொடுக்கும் பாகிஸ்தானுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியிருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருநாடு வல்லரசாக வேண்டும் என்றால் உற்பத்தியிலும் பொருளாதாரத்திலும் ராணுவ வலிமையிலும் தன்னிறைவு பெற வேண்டும். அதற்கான முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “உலக அரங்கில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வல்லரசாவதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதால் இந்தியாவை வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்றார். அவரது கூற்றுக்கு வலுச்சேர்த்திருக்கிறது LRLACM ஏவுகணை.

Tags: Indian Defense and Development OrganizationLONG RANGE LAND ATTACK CRUISE MISSILE.IndiapakistanDefense expertsLRLACM missile
ShareTweetSendShare
Previous Post

எலான் மஸ்கின் STAR SHIP ! : 30 நிமிடத்தில் அமெரிக்கா TO இந்தியா!

Next Post

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies