ஜான்சி ராணி! : ஆங்கிலேயர்களை விரட்டியடித்த வீர மங்கை!
Jul 6, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home கட்டுரை

ஜான்சி ராணி! : ஆங்கிலேயர்களை விரட்டியடித்த வீர மங்கை!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்தானே எளிதில் அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களைத் தீரத்துடன் எதிர்த்து நின்ற வீரமங்கை தான் ஜான்சி ராணி என்று போற்றப் படும் ராணி லட்சுமிபாய். 1857ம் ஆண்டில் இந்திய விடுதலைக்காக நடந்த முதல் போரின் வீரமுடன் போரிட்ட ஜான்சி ராணி பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இன்றைக்கு வாரணாசி என்று அழைக்கப் படும் காசியில் 1828ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி, கர்ஹடே பிராமண சமூகத்தைச் சேர்ந்த மோரோபந்த் தம்பே-பகீரதி சப்ரே தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.

பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா தம்பே என்றாலும், குடும்பத்தில் எல்லோரும் ‘மனு’ என்று செல்லமாக அழைத்தனர்.

நான்கு வயதிலேயே தாயை இழந்த மணிகர்ணிகா, சிறுவயதிலேயே, வாள்வீச்சு, குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் போன்ற வீரக் கலைகளைப் பயின்று, முழுமையான போர் திறன்களைப் பெற்றார்.

1842ம் ஆண்டில், மணிகர்ணிகாவை ஜான்சியின் இளவரசர் கங்காதர ராவ் நெவல்கர் திருமணம் செய்துகொண்டார். அன்றிலிருந்து லட்சுமிபாய் என்று அழைக்கப்பட்டதோடு, ஜான்சியின் ராணியாகவும் ஆனார்.

1851ம் ஆண்டில், ஜான்சி ராஜ தம்பதியருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு தாமோதர் ராவ் எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தனர். எதிர்பாராத விதமாக, நான்கு மாதங்களிலேயே அந்தக் குழந்தை இறந்தது.

பின்னர், ராஜா கங்காதர் ராவின் உறவினரின் மகன் ஆனந்த் ராவை தத்தெடுத்தனர். தாமோதர் ராவ் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். இந்து மரபின்படி அந்தக் குழந்தை ராஜ தம்பதியரின் சட்ட வாரிசாகவே இருந்தது. திடீரென, 1853, நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கங்காதர ராவ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

மன்னரின் மறைவுக்குப் பின், வளர்ப்புமகன் தாமோதர ராவை ஆட்சியில் அமர்த்த ஜான்சிராணி முடிவெடுத்தார்.

ஆனால், தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்க அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் டல்கௌசி மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி, ஜான்சி கோட்டையைத் தமது ஆட்சிக்கு உட்படுத்த முடிவெடுத்தனர் வெள்ளையர்கள். அதன்படி, 1854ஆம் ஆண்டு, ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கு 60,000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து, கோட்டையை விட்டு வெளியேற உத்தரவிட்டார்கள்.

ஆங்கிலேயரின் இந்த சதியை எதிர்த்து போராட முடிவு செய்தார் ஜான்சியின் ராணி லட்சுமிபாய். நாட்டைக் காக்க ஜான்சி ராணி, ஆற்றல் மிக்க போர்ப் படையை உருவாக்கினார். அதில் பெண்களுக்கும் போர்ப் பயிற்சி அளித்தார்.

இந்த கால கட்டத்தில், 1857ஆம் ஆண்டு மே 10ம் தேதி, ஆங்கிலேயருக்கு எதிரான மீரட் புரட்சி ஆரம்பமானது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றி ஆகியவற்றின் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய செய்தியையடுத்தே இந்த சிப்பாய் கலகம் வேகமாக பரவத் தொடங்கியது.

ஜான்சிராணி இலட்சுமிபாய் எந்நேரமும் தம்மை எதிர்க்கக்கூடும் என்ற அச்சத்தால், 1858ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி, ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஜான்சியை முற்றுகையிட்டது.

ஆங்கிலேயப் படைகள் வந்து ஜான்சியை ஒப்படைக்க கோரியபோது, லட்சுமிபாய் உறுதியாக மறுத்துவிட்டார்.

தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்சிராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். கடுமையான போருக்குப் பின், ஆங்கிலேய படையினர், அத்துமீறி ஜான்சி நகருக்குள் நுழைந்தனர்.

கடுங்கோபத்திலிருந்த ஆங்கிலேயர், ஜான்சி அரண்மனைக்குள் புகுந்து விலைமதிப்பற்ற பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்ததோடு, பெண்களுக்கும் பெரும் இன்னல்கள் விளைவித்தனர். தொடர்ந்து போரிட்ட போதும் 1858-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி இரவு, தனது மகனுடன், பெண் வீரர்கள் கொண்ட பாதுகாப்புப் படையுடன் நகரத்தை விட்டுத் தப்பித்தார் ஜான்சி ராணி.

தப்பித்து சென்ற ஜான்சி ராணி, குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையைக் கைப்பற்றினார்.

குவாலியரைக் கைப்பற்ற முயன்ற ஆங்கிலேயப் படையைத் துணித்து எதிர்த்தார். வீரத்தின் மகாசக்தியாக நின்று போரிட்ட ஜான்சி ராணி, ஒரு கட்டத்தில் போர் களத்தில் படுகாயம் அடைந்து, வீரமரணம் அடைந்தார்.

ஆண் வேடம் அணிந்திருந்ததால், ஜான்சி ராணி இறந்தது ஆங்கிலேயருக்குத் தெரியவில்லை. உடனடியாக, ஜான்சியின் பூல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு ராணியின் படையைச் சார்ந்த ராமச்சந்திரராவால் தகனம் செய்யப்பட்டது.

ஜான்சிக்கு ஆங்கிலேயர்களின் படையை வழி நடத்திய ஹீ ரோஸ், வீரமும் விவேகமும் விடாமுயற்சியும் கொண்ட ஜான்சி ராணி, அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜான்சி ராணியின் வீரதீரச் செயல்களும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வல்லமையும் , இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் போற்றப்படுகின்றன.

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரராக, இந்தியர்களுக்குச் சுதந்திர வேட்கையை விதைத்த வீரமங்கை ஜான்சி ராணியின் மாவீரத்தைப் போற்றுவோம்.

Tags: Queen of Jhansi! : Veera Mangai who chased away the British!
ShareTweetSendShare
Previous Post

தேவஸ்தானத்தில் பணிபுரியும் 300 மாற்று மதத்தினர் மீது நடவடிக்கை!

Next Post

உலகம் இனி என்னவாகும்? : குழந்தையை பெற்றெடுக்கும் ரோபோ தாய் “CAT GIRL’ !

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies