களிமண்ணில் கலைவண்ணம் : சிலை தயாரிப்பில் அசத்தும் இளம்பெண் - சிறப்பு தொகுப்பு!
Aug 15, 2025, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களிமண்ணில் கலைவண்ணம் : சிலை தயாரிப்பில் அசத்தும் இளம்பெண் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே களிமண் சிலைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்றவராக விளங்கும் இளம்பெண் பூமதி தயாரிக்கும் சிலைகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. பூமதியின் கை வண்ணத்தில் உருவாகும் சிலைகள் குறித்தும், அதன் தயாரிப்பு முறை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்கா நாகுடி அருகில் உள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்த பூமதியின் கை வண்ணத்திற்கு தனி மதிப்புண்டு என சொல்லும் அளவிற்கு அவரால் தயாரிக்கப்படும் சிலைகள் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.

சுவாமியின் படத்தை ஒருமுறை பார்த்து தன் மனதில் பதிய வைத்துக் கொண்டு தத்ரூபமாக அச்சிலையை வடிவமைப்பதில் வல்லவராக பூமதி திகழ்ந்து வருகிறார். தனது பள்ளிப்படிப்பை 2016ம் ஆண்டு நிறைவு செய்த பூமதியின் மேற்படிப்புக்கு பொருளாதாரம் பெரிய தடையாக இருந்ததினால் தந்தை செய்யும் தொழிலிலேயே தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார்.

பூமதியின் கை வண்ணத்தில் உருவாகும் சாமி சிலைகளை பார்க்கும் போது சாமியையே நேரில் பார்ப்பது போன்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு தத்ரூவமாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் சிலைகள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. தாய், தந்தையரின் பணிகளை பார்த்து தானாக விரும்பி இத்தொழிலை கற்றுக் கொண்டதாக கூறுகிறார் பூமதி

பூமதியால் ஒரு அடி முதல் 9 அடி உயரம் வரை தயாரிக்கப்படும் சுவாமி சிலைகள், பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தரிசனம் பெறுவதற்காக வைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை தயாரித்திருப்பதோடு, அப்துல்கலாம், விஜயகாந்த் போன்ற தலைவர்களின் உருவங்களையும், பறவைகள், விலங்குகளையும் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார் பூமதி

காலப்போக்கில் நலிவடைந்து வரும் இந்த தொழிலை ஊக்குவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பூமதியின் தந்தை மெய்யநாதன், இத்தொழிலுக்கான அங்கீகாரத்தையும் வழங்க அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

களிமண் சிலைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்று விளங்கும் பூமதியை பாராட்டி, அறியப்படாத அதிசய மனிதர்கள் எனும் தலைப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுக் கடிதமும் அனுப்பியிருந்தார். இதே போன்று பல்வேறு அரசியல் தலைவர்களின் பாராட்டை பூமதி பெற்றுள்ளார்.

தான் கற்றுக் கொண்ட தொழில் தன்னோடு முடிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பூமதி, அடுத்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்திருப்பது கலை மீது அவர் வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்துகிறது.

 

Tags: PudukkottaiBhumathiAranthangiKilgudiidols
ShareTweetSendShare
Previous Post

“பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும்” – தெலுங்கானா அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Next Post

செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் முதலை – சுமார் 5 மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

Related News

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies