கடலோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும்! : பாலச்சந்திரன்
Mar 19, 2026, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும்! : பாலச்சந்திரன்

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் எனவும், அது தமிழக கடற்கரைக்கு இணையாக 100 முதல் 150 கி.மீ தொலைவில் நிலை கொள்ளும் எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசியவர்,

நேற்று தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது இதை தொடர்ந்து நாளை வடமேற்கு திசை நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும்.

அதைத்தொடர்ந்து தமிழக கடற்கரைப் பகுதியை நோக்கி நகரக்கூடும் இதனைத் தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் மழை தொடரும்.

கனமழை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகன மழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்தார்.

27 ஆம் தேதி புதுச்சேரி கடலூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிட இடங்களில் அதிக கனமழையும் திருவள்ளூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் ஓரிடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

28ஆம் தேதி திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி கடலூர் ஒரு வருடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

29ஆம் தேதி திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை கன வாய்ப்பு இருக்கிறது.

மன்னார் வளைகுடா தமிழக கடற்கரை ஒட்டி உள்ள பகுதிகளில் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

28 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் அவ்வப்போது 90 km வேகத்தில் வீசப்படும்.

தரைக்காற்றைப் பொறுத்தவரையில் நாளையும் நாளை மறுநாளும் தமிழக கடற்கரை ஒட்டி உள்ள பகுதிகளில் தரைக்காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

ஆழ்கடலில் இருக்கின்ற மீனவர்கள் கரைக்கு திரும்பமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 328 மில்லி மீட்டர் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை காலகட்டத்தில் இந்த காலகட்டத்தில் இயல்பளவு 337 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடலோர பகுதிகளுக்கு இணையாக சுமார் 150 இருந்து 200 கிலோமீட்டர் நிலைக்கொண்டிருக்கும். கரை கடப்பது பற்றி இன்னும் தகவல் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.

Tags: In coastal areasthe land wind will blow at a speed of 40-50 kmph! : Balachandran
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுகிறது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

மாநகர பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீர்!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies