மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியாத அவலம், இதுதான் திராவிட மாடலா? - எல்.முருகன் கேள்வி!
Jan 14, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியாத அவலம், இதுதான் திராவிட மாடலா? – எல்.முருகன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 5, 2024, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியவில்லை என்றும் இதுதான் திராவிட மாடலா என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ” பல்லாவரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் குடித்ததில் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 30 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீருடன் கழிவுநீர் கலந்ததும், அதனை தெரியாமல் குடித்த மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிற்கே முன்மாதிரி எனக் கூறிக்கொள்ளும் இந்த போலி திராவிட மாடல் அரசு, மிக மிக அடிப்படையான பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கூட விநியோகம் செய்ய முடியாத அவல நிலையில் இருப்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஒரு புறம் புயல் பாதிப்பால் வட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வாய்ஜாலம் பேசும் திமுக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் புயல்- மழையால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் தவிர்த்து இருக்கலாம்.

கையாலாகாத திமுக அரசு மீது மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். பெருமளவில் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

தங்கள் பகுதிகளுக்கு வந்து பார்வையிட வரும் திமுகவினரைக் கூட மக்கள் அனுமதிக்க தயாரில்லை. மழைக் காலங்களில் குடிநீரை பாதுகாப்பாக விநியோகம் செய்ய வேண்டியது மிக மிக முக்கியமானது. ஆனால் இந்த சம்பவத்தை மறைத்து விடுவதிலேயே இந்த அரசு முனைப்புடன் உள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட மாநில அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்கள் சாப்பிட்ட உணவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நடந்துபோன பெரும் சோகத்தை மறைப்பதற்காக மனசாட்சி இல்லாமல் அமைச்சர் ஒருவரே பொய் பேசுகிறார். உணவில் பிரச்சனை என்றால் ஒரு வீட்டில் தானே பாதிப்பு ஏற்படும். ஒரு பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் எவ்வாறு வயிற்றுப் போக்கு என்றால் எப்படி? நடந்துபோன தவற்றை மறைப்பதில் காட்டும் தீவிரத்தை பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் காட்டியிருக்க வேண்டாமா?

தமிழக அரசு மெத்தனப் போக்குடன் சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி மக்களின் உயிருடன் விளையாடக்கூடாது. இதற்கு எனது கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறேன். குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தகுந்த சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யவும் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மக்களை காப்பதிலும் அவர்களுக்கு தேவையான, அடிப்படையான விஷயங்களை செய்வதிலும் இந்த அரசுக்கு ஆர்வம் இல்லை. மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கூட திராணியற்ற இந்த அரசை இனிமேலும் மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டோகளுக்கு போஸ் கொடுத்து, வெற்றுப்பேச்சு பேசி இந்த அரசை நடத்துவதை நிறுத்த வேண்டும். நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன் வரவேண்டும்.

மழைக்காலம் இன்னமும் தொடர்வதால் தமிழக அரசு தீவிர கண்காணிப்புடன் இருந்து மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இல்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத அரசை தூக்கி எறிய மக்கள் தயங்க மாட்டார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganDMK governmentDravidian modelPallavaram drinking water issue
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் – இலங்கை ஐ.நா. அலுவலகம் முன் உலக இந்து அமைப்பு பேரவை ஆர்ப்பாட்டம்!

Next Post

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மை கள நிலவரம் தெரிவிக்கப்படுகிறதா? அண்ணாமலை கேள்வி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies