பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்!
May 19, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்!

Web Desk by Web Desk
Dec 6, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சகோதரர் செந்தில் குமார் அவர்களது இல்லத்துக்கு இன்று நேரில் சென்று. அவரது மனைவி மற்றும் குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

தாய், தந்தை, மகன் என ஒரே நாளில், எந்தத் தவறும் செய்யாத மூன்று பேரை தங்கள் குடும்பத்தில் இழந்து, பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு, தற்போது கிடைக்கும் ஒரே ஆறுதல் இத்தனை கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிந்து, சட்டத்தின்படி கடுமையான தண்டனை வாங்கித் தருவது மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், குற்றம் நடந்து இன்றுடன் 9 நாட்கள் கடந்தும், தமிழகக் காவல்துறை 14 தனிப்படைகள் அமைத்தும், குற்றவாளிகள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. வழக்கு விசாரணையிலும் குறிப்பிடத்தகுந்த எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இத்தனை கொடூரமான ஒரு கொலைச் சம்பவம் நிகழ்ந்தும், குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது, இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் அச்ச உயர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில், நாமக்கல், சென்னிமலை, பல்லடம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற இதே போன்ற கொலைச் சம்பவங்களிலும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

காவல்துறை போன்ற அரசு இயந்திரங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பது. ஜனநாயகத்தின் உண்மையான கேள்விக்குறியாக்கி விடும். கட்டமைப்பையே தமிழகக் காவல்துறையினரின் திறமை மீது. யாருக்கும் எந்த சந்தேகமோ, கேள்விகளோ இல்லை.

ஆனால், தமிழகக் காவல்துறையினருக்கு இருக்கும் கட்டுப்பாடுகளோ தொழில்நுட்ப வசதி குறைபாடுகளோ, வழக்கு விசாரணை முன்னேற்றத்தில் தாமதத்தை ஏற்படுத்துகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும் இந்த வழக்கில் ஏற்படும் ஒவ்வொரு நாள் காலதாமதமும், குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு அளிப்பதாக இருப்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இந்த வழக்கை, இந்த ஒரு குற்றத்தின் அடிப்படையில் மட்டுமே விசாரிக்காமல், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் நடந்த இதே போன்ற குற்றங்களின் தொடர்ச்சியாக விசாரிப்பது. விசாரணையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது எங்கள் கருத்து.

குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்துவதே. நம் அனைவரின் ஒருமித்த நோக்கமாக இருக்கிறது. எனவே, வழக்கு விசாரணையைப் புதிய கோணத்தில் அணுகும் விதமாகவும், எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத துரிதமான விசாரணை நடைபெறவும், இந்த வழக்கை, தமிழக அரசே சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: stalincbi enquirypalladam murder caseannamalai
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

திருமலையில் ஜீசஸ் என பொறிக்கப்பட்ட பொருள் விற்பனை – கடைக்கு சீல் வைத்த தேவஸ்தான நிர்வாகம்!

Related News

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

திருவண்ணாமலை : கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : மீண்டும் உருவான பேய் ஏரி!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த சுற்றுலா பயணி மருத்துவமனையில் அனுமதி!

விராட்டை கௌரவப்படுத்த 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – ரெய்னா

அண்ணாமலையார் கோவிலில் கையில் செருப்புடன் சாமி தரிசனம் செய்த நபர்!

ஐபிஎல் சிறந்த அணியை தேர்வு செய்த ஆடம் கில்கிறிஸ்ட்!

கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies