பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்!
Sep 18, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்!

Murugesan M by Murugesan M
Dec 6, 2024, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சகோதரர் செந்தில் குமார் அவர்களது இல்லத்துக்கு இன்று நேரில் சென்று. அவரது மனைவி மற்றும் குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

தாய், தந்தை, மகன் என ஒரே நாளில், எந்தத் தவறும் செய்யாத மூன்று பேரை தங்கள் குடும்பத்தில் இழந்து, பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு, தற்போது கிடைக்கும் ஒரே ஆறுதல் இத்தனை கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிந்து, சட்டத்தின்படி கடுமையான தண்டனை வாங்கித் தருவது மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், குற்றம் நடந்து இன்றுடன் 9 நாட்கள் கடந்தும், தமிழகக் காவல்துறை 14 தனிப்படைகள் அமைத்தும், குற்றவாளிகள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. வழக்கு விசாரணையிலும் குறிப்பிடத்தகுந்த எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இத்தனை கொடூரமான ஒரு கொலைச் சம்பவம் நிகழ்ந்தும், குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது, இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் அச்ச உயர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில், நாமக்கல், சென்னிமலை, பல்லடம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற இதே போன்ற கொலைச் சம்பவங்களிலும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

காவல்துறை போன்ற அரசு இயந்திரங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பது. ஜனநாயகத்தின் உண்மையான கேள்விக்குறியாக்கி விடும். கட்டமைப்பையே தமிழகக் காவல்துறையினரின் திறமை மீது. யாருக்கும் எந்த சந்தேகமோ, கேள்விகளோ இல்லை.

ஆனால், தமிழகக் காவல்துறையினருக்கு இருக்கும் கட்டுப்பாடுகளோ தொழில்நுட்ப வசதி குறைபாடுகளோ, வழக்கு விசாரணை முன்னேற்றத்தில் தாமதத்தை ஏற்படுத்துகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும் இந்த வழக்கில் ஏற்படும் ஒவ்வொரு நாள் காலதாமதமும், குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு அளிப்பதாக இருப்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இந்த வழக்கை, இந்த ஒரு குற்றத்தின் அடிப்படையில் மட்டுமே விசாரிக்காமல், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் நடந்த இதே போன்ற குற்றங்களின் தொடர்ச்சியாக விசாரிப்பது. விசாரணையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது எங்கள் கருத்து.

குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்துவதே. நம் அனைவரின் ஒருமித்த நோக்கமாக இருக்கிறது. எனவே, வழக்கு விசாரணையைப் புதிய கோணத்தில் அணுகும் விதமாகவும், எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத துரிதமான விசாரணை நடைபெறவும், இந்த வழக்கை, தமிழக அரசே சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaistalincbi enquirypalladam murder case
Share
Tweet
SendShare
Previous Post

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

திருமலையில் ஜீசஸ் என பொறிக்கப்பட்ட பொருள் விற்பனை – கடைக்கு சீல் வைத்த தேவஸ்தான நிர்வாகம்!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies