பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்!
Jun 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்!

Murugesan M by Murugesan M
Dec 6, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சகோதரர் செந்தில் குமார் அவர்களது இல்லத்துக்கு இன்று நேரில் சென்று. அவரது மனைவி மற்றும் குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

தாய், தந்தை, மகன் என ஒரே நாளில், எந்தத் தவறும் செய்யாத மூன்று பேரை தங்கள் குடும்பத்தில் இழந்து, பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு, தற்போது கிடைக்கும் ஒரே ஆறுதல் இத்தனை கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிந்து, சட்டத்தின்படி கடுமையான தண்டனை வாங்கித் தருவது மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், குற்றம் நடந்து இன்றுடன் 9 நாட்கள் கடந்தும், தமிழகக் காவல்துறை 14 தனிப்படைகள் அமைத்தும், குற்றவாளிகள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. வழக்கு விசாரணையிலும் குறிப்பிடத்தகுந்த எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இத்தனை கொடூரமான ஒரு கொலைச் சம்பவம் நிகழ்ந்தும், குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது, இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் அச்ச உயர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில், நாமக்கல், சென்னிமலை, பல்லடம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற இதே போன்ற கொலைச் சம்பவங்களிலும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

காவல்துறை போன்ற அரசு இயந்திரங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பது. ஜனநாயகத்தின் உண்மையான கேள்விக்குறியாக்கி விடும். கட்டமைப்பையே தமிழகக் காவல்துறையினரின் திறமை மீது. யாருக்கும் எந்த சந்தேகமோ, கேள்விகளோ இல்லை.

ஆனால், தமிழகக் காவல்துறையினருக்கு இருக்கும் கட்டுப்பாடுகளோ தொழில்நுட்ப வசதி குறைபாடுகளோ, வழக்கு விசாரணை முன்னேற்றத்தில் தாமதத்தை ஏற்படுத்துகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும் இந்த வழக்கில் ஏற்படும் ஒவ்வொரு நாள் காலதாமதமும், குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு அளிப்பதாக இருப்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இந்த வழக்கை, இந்த ஒரு குற்றத்தின் அடிப்படையில் மட்டுமே விசாரிக்காமல், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் நடந்த இதே போன்ற குற்றங்களின் தொடர்ச்சியாக விசாரிப்பது. விசாரணையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது எங்கள் கருத்து.

குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்துவதே. நம் அனைவரின் ஒருமித்த நோக்கமாக இருக்கிறது. எனவே, வழக்கு விசாரணையைப் புதிய கோணத்தில் அணுகும் விதமாகவும், எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத துரிதமான விசாரணை நடைபெறவும், இந்த வழக்கை, தமிழக அரசே சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaistalincbi enquirypalladam murder case
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

திருமலையில் ஜீசஸ் என பொறிக்கப்பட்ட பொருள் விற்பனை – கடைக்கு சீல் வைத்த தேவஸ்தான நிர்வாகம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies