மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
May 25, 2025, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Web Desk by Web Desk
Dec 14, 2024, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக மூன்றடி உயரம் 2 அடி அகலம் கொண்ட தாமிரக் கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டு, 300 கிலோ நெய்யில் 150 மீட்டர் காடா துணி ஊறவைத்து தாமிர கொப்பரையில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது.

இன்று மாலை ஆறு மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றியவுடன் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் காத்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 7-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது.

தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பனை ஓலைகளை கொண்டு செய்யப்பட்டிருந்த சொக்கப்பனையும் தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு, கார்த்திகை உற்சவ விழா கடந்த 10 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள திருவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தனர்.

இந்நிலையில், திருக்கார்த்திகையை முன்னிட்டு, இன்று கோயில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்பட்டது. கோயில் பணியாளர்கள், பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என அனைவரும் பொற்றாமரைக்குளம், அம்மன் , சுவாமி சன்னதி என கோயில் முழுவதும் அகல் விளக்குகள் மூலம் லட்ச தீபங்கள் ஏற்றினர். தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் கீழமாசி வீதி , தேரடி அருகே எழுந்தருளினர். பின்னர், அங்கு சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags: MaduraiPalani Murugan templeKarthigai Deepam festivalMaha DeepamThiruparankundram Subramania Swamy Temple
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் CEO கொலை : கோடீஸ்வர இளைஞர் கைது – சிறப்பு தொகுப்பு!

Next Post

திருவண்ணாமலை தீப திருவிழா – போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள்!

Related News

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies