மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
Jan 14, 2026, 03:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2024, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக மூன்றடி உயரம் 2 அடி அகலம் கொண்ட தாமிரக் கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டு, 300 கிலோ நெய்யில் 150 மீட்டர் காடா துணி ஊறவைத்து தாமிர கொப்பரையில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது.

இன்று மாலை ஆறு மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றியவுடன் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் காத்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 7-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது.

தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பனை ஓலைகளை கொண்டு செய்யப்பட்டிருந்த சொக்கப்பனையும் தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு, கார்த்திகை உற்சவ விழா கடந்த 10 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள திருவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தனர்.

இந்நிலையில், திருக்கார்த்திகையை முன்னிட்டு, இன்று கோயில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்பட்டது. கோயில் பணியாளர்கள், பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என அனைவரும் பொற்றாமரைக்குளம், அம்மன் , சுவாமி சன்னதி என கோயில் முழுவதும் அகல் விளக்குகள் மூலம் லட்ச தீபங்கள் ஏற்றினர். தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் கீழமாசி வீதி , தேரடி அருகே எழுந்தருளினர். பின்னர், அங்கு சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags: Thiruparankundram Subramania Swamy TempleMaduraiPalani Murugan templeKarthigai Deepam festivalMaha Deepam
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் CEO கொலை : கோடீஸ்வர இளைஞர் கைது – சிறப்பு தொகுப்பு!

Next Post

திருவண்ணாமலை தீப திருவிழா – போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies