கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசு - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
Oct 6, 2025, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 14, 2024, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே பொதுமக்களின் பாதிப்புக்கு முக்கிய காரணம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு தென்மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் தொடர்மழையால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள், தற்போது பெய்து வரும் கனமழை அப்பகுதி மக்களை மீளவே முடியாத அளவிற்கான துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் மூலமாக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட பின்பும் கூட எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத திமுக அரசால், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளநீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒவ்வொரு பருவமழையின் போதும் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மழைநீர் சூழ்வதும், உடமைகளை முழுமையாக இழந்து உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கூட கிடைக்காமல் மக்கள் போராடுவதும் வாடிக்கையாகி வருவது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.

எனவே, மேலும் இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை முறையாக பின்பற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதோடு, பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தினகரன் தெரிவித்துள்ளார்.

Tags: low pressurerain warningmetrological centertamandu rainheavy rainchennai metrological centerrain alertTTV Dinakaranweather update
ShareTweetSendShare
Previous Post

குடியரசுத் துணைத் தலைவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு!

Next Post

நடிகர் அல்லு அர்ஜூன் விடுதலை – ரசிகர்களின் அன்புக்கு நன்றி என உருக்கம்!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies