சிதறும் இண்டி கூட்டணி : மம்தாவா? ராகுலா? முற்றும் மோதல் - சிறப்பு கட்டுரை!
Oct 3, 2025, 08:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிதறும் இண்டி கூட்டணி : மம்தாவா? ராகுலா? முற்றும் மோதல் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் அல்லாத ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பது குறித்து மம்தா பானர்ஜி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், இண்டி கூட்டணி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

பாஜகவை தனித்து தோற்கடிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்த காங்கிரஸ் , எதிர்கட்சிகளுடன் இணைந்து, இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்று இண்டி கூட்டணியை உருவாக்கியது.

இண்டி கூட்டணியை உருவாக்கிய போதே அந்த கூட்டணியின் தலைவர் யார் ? கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விகள் எழுந்தது. மல்லிகார்ஜுன கார்கே அந்த கூட்டணியின் தலைவராக இருந்த போதும், பல மாநிலங்களில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இண்டி கூட்டணிக்கு விதை போட்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முதல் ஆளாக, கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது. நாடாளுமன்றத்தில் 99 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக, மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், அவையில், பிரதமர் மோடியின் அரசை குறை சொல்லி, அவையை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், அதற்காக பின்பற்ற வேண்டிய உத்தியில் இண்டி கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அதானி மீதான குற்றப்பத்திரிகை விவகாரத்தில் விவாதம் நடத்தக் கோரி, அவையை முடக்கியது.

அதானி பிரச்சனை அர்த்தமற்றது என்றும் அதனால் மக்களுக்கு என்ன பயன் ? என்று மம்தா, ராகுலுக்கு பதிலளித்தார். மேலும், ராகுலுக்கு நேர் எதிராக, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற முக்கிய மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அவையை முறையாக நடக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

மேலும், காங்கிரஸை அடுத்து நாடாளுமன்றத்தில் பெரிய எதிர்கட்சிகளான, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினர்கள், அதானி விவகாரத்தில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும், மக்களவையில் வீர் சாவர்க்கரை ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் தாக்கியது, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இண்டி கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு ராகுல் காந்தியின் செயல்பாடுகளே காரணம் என்று கூறப்படுகிறது. பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி மற்றும் அரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விகள் காரணமாக இந்தியா கூட்டணிக்குள் ராகுலுக்கு எதிரான குரல்கள் கேட்கின்றன. கூடவே, இந்தியா கூட்டணியின் தலைமை மாற்றம் பற்றிய கருத்துக்களும் வெளிவருகின்றன.

கடந்த வாரம், மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் செயல்பாடுகளில் தனக்கு அதிருப்தி இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, முன்னின்று இந்தியா கூட்டணியைத் தான் உருவாக்கியதாகவும் இப்போது, ​​பொறுப்பில் இருப்பவர்கள் கூட்டணியை சரியாக நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியைக் காங்கிரசால் நடத்த முடியவில்லை என்றால், இந்தியா கூட்டணிக்குத் தாம் தலைமை ஏற்கவும் தயாராக உள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் வெளிப்படையாக மம்தா பானர்ஜியை ஆதரித்துள்ளனர். நாட்டின் முக்கியமான தலைவர் மம்தா என்று சொன்ன சரத் பவார், இந்தியா கூட்டணியை வழிநடத்தும் திறமையும் அவருக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாகவும் , இண்டி கூட்டணி தலைவராக மம்தா வர காங்கிரஸ் அனுமதிக்க வேண்டும் என்றும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டிருக்கிறார்.

நீண்டகால அரசியல் மற்றும் தேர்தல் அனுபவம் உள்ள மம்தா பானர்ஜி, இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கி, வழிநடத்த வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான ராம் கோபால் யாதவ், தேர்தல்களில் ஒன்றாக வெற்றிபெற வேண்டும் என்றும் அதற்கான வழியை காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே, கடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே காங்கிரசுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.

தனது தலைமையின் கீழ், இந்தியா கூட்டணி தோல்வியடைந்துள்ளது என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பழைய பெரிய கட்சி என்ற தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகள் கூட்டணித் தலைவராக ராகுல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பல இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே, இந்தியா கூட்டணித் தலைவராக, தம்மை ஆதரித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இது ஒரு நல்ல நகைச் சுவை என்று காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. எனினும் மம்தாவா ? ராகுலா ? என்ற கேள்விக்கு, மம்தா என்ற குரலே அதிகம் கேட்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ராகுல் மீதான நம்பிக்கை முற்றிலுமாக குறைந்து விட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: rahul gandhiCongressINDI AllianceMamata BanerjeeIndi alliance spilit
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் படுதோல்விக்கு சோனியா குடும்பமே காரணம் : மணி சங்கர் ஐயர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

Next Post

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிக்கையை திரும்ப பெறுக : தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!

Related News

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies