வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு தமிழக மக்கள் தக்க பதிலளிப்பார்கள் - அண்ணாமலை உறுதி!
Feb 2, 2026, 08:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு தமிழக மக்கள் தக்க பதிலளிப்பார்கள் – அண்ணாமலை உறுதி!

Murugesan M by Murugesan M
Dec 21, 2024, 10:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு, கூடிய விரைவில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “கோயம்புத்தூரில், கோவை குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து, நடைபெற்ற கருப்பு தின பேரணியில் கலந்து கொண்டோம். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் . சிவலிங்கம். கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், , கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ் மற்றும் பெருவாரியான பொதுமக்களும், பாஜக சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

தீவிரவாதச் செயல்களால், கோயம்புத்தூரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயம்புத்தூரில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறது திமுக அரசு.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை மனித வெடிகுண்டு தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று பூசி மறைக்கப் பார்த்தது திமுக அரசு. அதற்குத் துணை நின்றது காவல்துறை. ஆனால், என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில், கோவை மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்காகத் திட்டமிடப்பட்ட இடங்கள், அதன் பின்னணியிலிருந்த தீவிரவாதிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், கோயம்புத்தூர் காவல் ஆணையர் அலுவலகமும் ஒன்று.

இனியாவது காவல்துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்காக திமுக ஆடும் நாடகத்துக்கு, காவல்துறை துணைபோகக் கூடாது. கடந்த 1998 ஆம் ஆண்டு, 58 உயிர்கள் பலியான கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின்போதும், திமுக ஆட்சிதான். திமுக அரசு நினைத்திருந்தால், அந்த குண்டுவெடிப்பையும் தடுத்திருக்க முடியும்.

அத்தனை உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், திமுக, வாக்கு அரசியலுக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தீவிரவாதச் செயல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால், 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதியின் உடலை, ஊர்வலமாகக் கொண்டு செல்ல அனுமதித்திருக்கிறது அதே திமுக அரசு.

திமுக மட்டுமல்ல, சீமான், திருமாவளவன் ஆகியோரும், வாக்கு அரசியலுக்காக, தீவிரவாதிக்கு இரங்கல் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். கோயம்புத்தூர் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். கோயம்புத்தூரின் வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிப்புக்குள்ளாவதே, இந்த வாக்கு அரசியல் செய்யும் கட்சிகளால்தான். கோயம்புத்தூர் மக்கள் இந்தக் கட்சிகளைப் புறக்கணிப்பதே, வளர்ச்சிக்கான தீர்வாக அமையும்.

மேலும் பேரணியில் பங்கேற்ற , இந்து முன்னணி மாநிலத் தலைவர்  காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சிவலிங்கம், பாஜக
சகோதர சகோதரிகள், பொதுமக்கள் உள்ளிட்டஅனைவரையும் கைது செய்திருக்கிறது கையாலாகாத திமுக அரசின் காவல்துறை.

கோயம்புத்தூரில் குண்டு வைத்து பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதியின் இறுதி ஊர்வலத்துக்குப் பாதுகாப்பும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிய எங்களைக் கைதும் செய்து, வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு, கூடிய விரைவில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: coimbatore bjp rallyanathi SrinivasanDMKVishwa Hindu ParishadTamil Nadu BJP State President AnnamalaiHindu Munnani State President Kadeshwara C. Subramaniam
ShareTweetSendShare
Previous Post

சென்னை ராஜ் பவனில் கிறிஸ்துமஸ் விழா – தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்தின் நடுவே சென்ற காவல்துறை வாகனம் முற்றுகை!

தைப்பூசத் திருநாள் – வயலூர் முருகன் கோயிலுக்கு பால்குடம் சுமந்து சென்ற விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர்!

தைப்பூசத் திருவிழா – சிறுவாபுரி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மிளகாய் கரைசல் அபிஷேகம்!

தைப்பூச திருநாளில் பழநி முருகன் கோயிலில் வழிபாடு – காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார் அண்ணாமலை!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – 108 விளக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

வளர்ச்சியை பிரகாசமாக்கும் “G.I.T.A. MODEL” – பட்ஜெட்டில் மறைந்திருக்கும் நான்கெழுத்து மந்திரம் – சிறப்பு தொகுப்பு!

அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மையாக இருக்க வேண்டும் – ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு நடப்பு ஆண்டு நிதியுதவி அதிகரிப்பு – வங்க தேசத்திற்கு நிதி குறைப்பு!

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை – ரூ. 7 லட்சம் கோடி ஒதுக்கீடு!

அமெரிக்காவில் 300 நகரங்களில் லட்சக்கணக்கானோர் போராட்டம்!

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு: 133 பேர் பலி

140 கோடி இந்தியர்களுக்கான பட்ஜெட் – பிரதமர் மோடி

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்கு விடுதி! – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

2026-27 பட்ஜெட்டின் தாக்கத்தால் விலை குறையும் பொருட்கள் எவை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies