இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்கட்சிகளின் கருத்துகள் முற்றிலும் தவறு என்பதை தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்துள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், சொல்லரங்ககம் நிகழ்ச்சி மூலம் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட விவரங்களை அறிய முடிந்ததாகவும், வரி பகிர்வு உள்ளிட்டவையும் புள்ளிவிவரங்களுடன் தெரிந்துக்கொள்ள முடிந்ததாகவும் கூறினார்.