மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Aug 19, 2025, 07:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 28, 2024, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு.அருண்குமார் IPS அவர்களும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறுவதை பார்க்கும் போது திமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்ற குற்றவாளிகள் யார் என்பதை மக்களிடம் மறைப்பதற்கான முயற்சி திமுக அரசின் உத்தரவின் பேரில் நடந்து கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் இயங்குகிற தமிழக காவல்துறை பாதிக்கப்பட்ட மாணவி மீதே குற்றம் இருப்பது போன்ற விஷயங்களை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்ததும், மாணவியின் சுய விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ததும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததாகக் தெரியவில்லை.

ஏதோ உள்நோக்கத்தோடு திட்டமிட்டே தமிழக அரசும் காவல்துறையும் இவ்வழக்கில் செயல்படுவது போன்ற சந்தேகத்தை அனைவருக்கும் ஏற்படுத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுகவை சேர்ந்தவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதும், தேசிய மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதும் தான் இவ்விஷயத்தில் இதுவரை நடந்துள்ள ஒரே நம்பிக்கையும், ஆறுதலும் ஆகும்.

தமிழக காவல்துறை இவ்வழக்கை விசாரிப்பதை விட சிபிஐ விசாரிப்பதே பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க ஒரே வழி என்பதே நிதர்சனம்” என ஹெச்.ராஜா  தெரிவித்துள்ளார்.

Tags: Anna University campusstudent sexual assaultDMKAnna Universitytamilnadu governmenth rajachennai police
ShareTweetSendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் தியாகங்களை போற்றி வணங்குவோம் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதம்!

Related News

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies