அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!
Sep 29, 2025, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!

Web Desk by Web Desk
Jan 4, 2025, 09:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் 11 கோடி ரூபாய் பணம் சிக்கியது. இவர் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோரின் ஆதரவாளராக அறியப்படுவர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வந்தனர். அப்போது துரைமுருகனும், கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசிய போது, தங்களது ஆதரவாளர்கள் முன்னிலையில் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. வாய்மொழியில் கூறுவதை தவிர்த்து இ-மெயில் மூலமாக தகவல் அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து 6 மணி நேரத்திற்கு பிறகு இ-மெயில் அனுப்பப்படவே, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

அமைச்சர் துரைமுருகன் அறை மட்டும் பூட்டிய நிலையில் இருப்பதால் அதனை உடைக்க திட்டமிட்ட ED அதிகாரிகள் கார்பெண்டர் உதவியுடன் இரண்டு அறையின் கதவை உடைத்து ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் திமுக எம்.பி.யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறையினர் 2ஆம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை பணம் என்னும் இயந்திரத்தோடு எஸ்பிஐ வங்கியின் 2 ஊழியர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு சென்றனர். அப்போது, பணம் என்னும் இயந்திரம் பழுதான நிலையில், புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் கணக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Kathir Anand MP.kathir anand house raidedkatpaddiEnforcement Directorateminister duraimuruganVellore mpcrowbar.
ShareTweetSendShare
Previous Post

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு தொடங்க பெற்றோர் ஒப்புதல் அவசியம் – விரைவில் வருகிறது புதிய விதி!

Related News

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies