அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 09:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் 11 கோடி ரூபாய் பணம் சிக்கியது. இவர் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோரின் ஆதரவாளராக அறியப்படுவர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வந்தனர். அப்போது துரைமுருகனும், கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசிய போது, தங்களது ஆதரவாளர்கள் முன்னிலையில் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. வாய்மொழியில் கூறுவதை தவிர்த்து இ-மெயில் மூலமாக தகவல் அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து 6 மணி நேரத்திற்கு பிறகு இ-மெயில் அனுப்பப்படவே, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

அமைச்சர் துரைமுருகன் அறை மட்டும் பூட்டிய நிலையில் இருப்பதால் அதனை உடைக்க திட்டமிட்ட ED அதிகாரிகள் கார்பெண்டர் உதவியுடன் இரண்டு அறையின் கதவை உடைத்து ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் திமுக எம்.பி.யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறையினர் 2ஆம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை பணம் என்னும் இயந்திரத்தோடு எஸ்பிஐ வங்கியின் 2 ஊழியர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு சென்றனர். அப்போது, பணம் என்னும் இயந்திரம் பழுதான நிலையில், புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் கணக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Enforcement Directorateminister duraimuruganVellore mpcrowbar.Kathir Anand MP.kathir anand house raidedkatpaddi
ShareTweetSendShare
Previous Post

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு தொடங்க பெற்றோர் ஒப்புதல் அவசியம் – விரைவில் வருகிறது புதிய விதி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies