அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் தற்போது ஸ்கரப் டைபஸ் எனும் பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்கரப் நோயின் அறிகுறிகள் குறித்தும், அதிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டிய வழிகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற ஒட்டுண்ணியால் பரவும் ஸ்கரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சல்  இந்தியாவில் முதன்முறையாக உத்திரப்பிரதேசத்தில் தான் கண்டறியப்பட்டது.

2021 ஆம் ஆண்டு பரவிய மர்மக் காய்ச்சல் தொடர்பான சோதனையில் ஸ்கரப் டைபஸ் காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை ஏற்படும் எனவும், உடலின் பல்வேறு இடங்களில் கருப்புக் கொப்பளங்கள் போல உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சிலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கரப் டைபஸ் என்பது பூச்சிக்கடியால் ஏற்படும் நோய் என்பதால் விவசாயத்தில் ஈடுபடுவோர் அதிகமாக இந்நோய்க்கு பாதிக்கப்படக் கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயம், புதர் நிறைந்த பகுதிகளில் இருப்பவர்கள், காடுகளில் வேலை செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  ஒருவருக்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும்,  ஸ்கரப் டைபஸ் நோய்த்தொற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால், டாக்ஸிசிலின், அசித்ரோமைசின், ரிஃபாம்பிசின் உள்ளிட்ட மருந்துகளை நோயாளிகளின் உடல்நிலை மற்றும் வயதுக்கு ஏற்ற வகையில் வழங்க வேண்டும் எனவும்,  48 மணி முதல் 72 மணிக்குள்ளாக உடல்நிலை சீரடையவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags: Scrub TyphusPublic Health Departmentsymptoms of scab diseaseviral feverOrientia tsutsugamushiTamil NaduIndiauttar pradesh
Share
Tweet
SendShare
Previous Post

திமுக மீது தொடரும் அதிருப்தி : கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சிகள்? – சிறப்பு கட்டுரை!

Next Post

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies