திமுக மீது தொடரும் அதிருப்தி : கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சிகள்? - சிறப்பு கட்டுரை!
Jul 3, 2025, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக மீது தொடரும் அதிருப்தி : கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சிகள்? – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Jan 3, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சிக்கு வந்தபின்பு முதல் மூன்றாண்டு ஆண்டுகள் அக்கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்ட கூட்டணிக் கட்சிகள் தற்போது கண்டித்து அறிக்கை வெளியிடத் தொடங்கியுள்ளன. திமுக அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தியில் கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கும் கூட்டணிக் கட்சிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.

திமுகவின் தயவாலும், பண உதவியாலும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் திமுக ஆட்சியின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை கண்டும் காணாதது போல கடந்த சென்ற கூட்டணிக் கட்சிகள் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் திமுக அரசை விமர்சிக்கவும், கண்டிக்கவும் தொடங்கியுள்ளன.

அண்மையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று திமுகவை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவரே கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி திமுகவுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தற்போது ஆதவ் அர்ஜுனாவை பகடைக்காயாக பயன்படுத்தி ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அடுத்து வரும் தேர்தலில் அதிகளவிலான இடங்களை கேட்டுப்பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

தமிழக அரசியல் களம் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், அதன் தலைவர் திருமாவளவனையும் சுற்றிவருவதை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தற்போது மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் வகையில் திமுக அரசு நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுக அரசு நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு நிர்வாகத்தில் நடைபெறும் குளறுபடிகள் வெளிப்படையாகவே கண்டிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரம் செய்வது, போராட்டம் நடத்துவது, அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள் எனவும் ஆனால் தமிழகத்தில் தெருமுனைக்கூட்டம், ஊர்வலம் என அனைத்திற்குமே அனுமதில் தருவதில் காலதாமதம் செய்வதும், தொட்டதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கைது செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளின் உதவியோடு மேம்படுத்தும் பள்ளிக்கல்வித்துறையின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்ட கூட்டணிக் கட்சிகள் தற்போது தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் திமுகவை கண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது கூட்டணியை விட்டு வெளியேறும் முயற்சியா ? அல்லது கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: VKCMarxistTamil Nadu Vazhuvurimai KatchiManiateya Makkal Katchidmk alliance splitDMKmdmk
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசன விழா – ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

Next Post

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies