அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 09:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் 11 கோடி ரூபாய் பணம் சிக்கியது. இவர் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோரின் ஆதரவாளராக அறியப்படுவர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வந்தனர். அப்போது துரைமுருகனும், கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசிய போது, தங்களது ஆதரவாளர்கள் முன்னிலையில் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. வாய்மொழியில் கூறுவதை தவிர்த்து இ-மெயில் மூலமாக தகவல் அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து 6 மணி நேரத்திற்கு பிறகு இ-மெயில் அனுப்பப்படவே, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

அமைச்சர் துரைமுருகன் அறை மட்டும் பூட்டிய நிலையில் இருப்பதால் அதனை உடைக்க திட்டமிட்ட ED அதிகாரிகள் கார்பெண்டர் உதவியுடன் இரண்டு அறையின் கதவை உடைத்து ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் திமுக எம்.பி.யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறையினர் 2ஆம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை பணம் என்னும் இயந்திரத்தோடு எஸ்பிஐ வங்கியின் 2 ஊழியர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு சென்றனர். அப்போது, பணம் என்னும் இயந்திரம் பழுதான நிலையில், புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் கணக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Kathir Anand MP.kathir anand house raidedkatpaddiEnforcement Directorateminister duraimuruganVellore mpcrowbar.
Share
Tweet
SendShare
Previous Post

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு தொடங்க பெற்றோர் ஒப்புதல் அவசியம் – விரைவில் வருகிறது புதிய விதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies