கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என அண்ணாமலை கூறியது அருமையான கருத்து எனவும், இதற்காகவே அவருக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என்றும் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில்கள் பாழடைந்து நிலையில் இருப்பதற்கு ஆளுங்கட்சியினரே காரணம் எனறும், தமிழக அரசு கோயில்களை முறையாக புனரமைப்பதில்லை எனறும் அவர் குற்றம்சாட்டினார்.
கோயிலுக்குள் செல்ல விரும்பாத ஸ்டாலின் அதை நிர்வாகம் செய்வது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அறநிலையத்துறை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என கூறியதாகவும், இதற்காக அவருக்க தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.