தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துகிறது திமுக அரசு! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Aug 25, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துகிறது திமுக அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Jan 6, 2025, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திமுக அரசு, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் கோபத்தைத் திசை திருப்பவும், சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிகளைச் சுட்டிக்காட்டியதற்காக,  தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.

இன்று, நமது தமிழக ஆளுநர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக அரசு அதனை மறுத்திருக்கிறது. திமுக அரசுக்குப் பின்வருவனவற்றை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

1. கடந்த நவம்பர் 23, 1970 அன்று, மனோன்மணீயம் சுந்தரனார் பிள்ளை அவர்கள் எழுதிய அசல் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சுருக்கி, திருத்தப்பட்ட பாடலை, மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து என, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு அரசாணை மூலம் அறிவித்தார். அரசு தொடர்பான அனைத்துச் செயல்பாடுகள், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

2. இருப்பினும், 1991 ஆம் ஆண்டு வரை, தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.

3. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம், செல்வி ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்தபோதுதான், முதல்முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும், முறையே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

4. மத்திய அரசின், தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளின்படி, மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் நடக்கும் முறையான அரசு நிகழ்ச்சிகளில், ஆளுநர்/ துணைநிலை ஆளுநர் வருகையின் போதும், நிகழ்ச்சியிலிருந்து விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். இந்த உத்தரவு, 1971 ஆம் ஆண்டின் தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் கவனத்தை திமுக அரசின் நிர்வாகத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வகுத்துள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயற்சிப்பது, திமுக அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆளுநர் உரை தொடங்கும் முன்னரும், நிறைவு பெற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழக பாஜக
நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

Tags: The DMK government is blaming the Tamil Nadu Governor to cover up their administrative failure! - Annamalai allegationbjp k annamalaitn bjpTN BJP Leader
ShareTweetSendShare
Previous Post

தனியார் பள்ளி வேன் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு!

Next Post

நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 CRPF வீரர்கள் வீர மரணம்!

Related News

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தம் மத்திய அரசு அறிவிப்பு!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies