டங்ஸ்டன் திட்டம் ரத்து : கடந்து வந்த பாதை!
Sep 30, 2025, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டங்ஸ்டன் திட்டம் ரத்து : கடந்து வந்த பாதை!

Web Desk by Web Desk
Jan 23, 2025, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015 ஹெக்டர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது

2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் கூடிய சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு ஏல அறிவிப்பு வெளியானது. 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிங்க் இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஏல அனுமதி வழங்கப்பட்டது.

இயற்கை வளங்களும், பல்லுயிர்களும் நிறைந்த அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மதுரை மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

ஏல அறிவிப்பு வெளியானது முதல் ஏலம் முடிவுக்கு வரும் வரை எந்தவித எதிர்ப்பையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை என மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் பதிலளித்தது.

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக 2023ம் ஆண்டு மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என தமிழக அரசு மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

2024ம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிடுமாறு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்தித்து வலியுறுத்தினர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி 50க்கும் அதிகமான கிராம மக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினர்.

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் மக்களை நேரில் சந்தித்து திட்டம் நிச்சயம் கைவிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியளித்தார்.

அதன் தொடர்ச்சியாக டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான போராட்டக்குழுவின் பிரதிநிதிகள் அண்ணாமலையின் மூலம் டெல்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சருடன் சந்தித்து பேசினர்.

முடிவில் மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அனுமதியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags: tungsten mineTungsten projecttungsten project maduraiTungsten Mine Plan CancelledMinistry of Mines DecisionTungsten mining project cancellationMaduraiCentral government announcementannamalaiடங்ஸ்டன் சுரங்கம்bjp k annamalaiடங்ஸ்டன் திட்டம் ரத்துtn bjpகடந்து வந்த பாதைtamil janam tv
ShareTweetSendShare
Previous Post

கனிம வளங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு : அணிவகுத்து நின்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள்!

Next Post

தெலங்கானாவில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது!

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies