டங்ஸ்டன் திட்டம் ரத்து : கடந்து வந்த பாதை!
Mar 15, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டங்ஸ்டன் திட்டம் ரத்து : கடந்து வந்த பாதை!

Murugesan M by Murugesan M
Jan 23, 2025, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015 ஹெக்டர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது

2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் கூடிய சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு ஏல அறிவிப்பு வெளியானது. 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிங்க் இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஏல அனுமதி வழங்கப்பட்டது.

இயற்கை வளங்களும், பல்லுயிர்களும் நிறைந்த அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மதுரை மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

ஏல அறிவிப்பு வெளியானது முதல் ஏலம் முடிவுக்கு வரும் வரை எந்தவித எதிர்ப்பையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை என மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் பதிலளித்தது.

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக 2023ம் ஆண்டு மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என தமிழக அரசு மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

2024ம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிடுமாறு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்தித்து வலியுறுத்தினர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி 50க்கும் அதிகமான கிராம மக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினர்.

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் மக்களை நேரில் சந்தித்து திட்டம் நிச்சயம் கைவிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியளித்தார்.

அதன் தொடர்ச்சியாக டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான போராட்டக்குழுவின் பிரதிநிதிகள் அண்ணாமலையின் மூலம் டெல்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சருடன் சந்தித்து பேசினர்.

முடிவில் மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அனுமதியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags: tungsten mineTungsten projecttungsten project maduraiTungsten Mine Plan CancelledMinistry of Mines DecisionTungsten mining project cancellationMaduraiCentral government announcementannamalaiடங்ஸ்டன் சுரங்கம்bjp k annamalaiடங்ஸ்டன் திட்டம் ரத்துtn bjpகடந்து வந்த பாதைtamil janam tv
ShareTweetSendShare
Previous Post

கனிம வளங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு : அணிவகுத்து நின்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள்!

Next Post

தெலங்கானாவில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies