தை அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!
Aug 6, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தை அமாவாசையை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில்   தங்களது முன்னோர்களுக்காக பொதுமகக்ள் தர்ப்பணம் கொடுத்தனர்.

மதுரை  வைகை ஆற்றங்கரையில் சிம்மக்கல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

வைகையாற்றின் தென்கரை பகுதிகளான பேச்சியம்மன் படித்துறை, யானைக்கல் தரைப்பாலம், ஆழ்வார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் அளித்து பின்னர் ஆற்றில் புனித நீராடி சென்றனர்.

மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்களும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து சென்றனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் திரளான மக்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கானோர், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து காவிரியில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரைக்குஅதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து எள், மாவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு அவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல்  குற்றாலத்திற்கு திரளான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து அருவிகளில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயில் கடற்கரையில் நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலை முதலே திரண்ட ஏராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடினர். தொடர்ந்து பச்சரிசி, எள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

திருநெல்வேலி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் திரளான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்த நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags: Thai AmavasyaPechiyamman PadithuraiMaduraiTamil Naduvaigai riverwater bodies
ShareTweetSendShare
Previous Post

காட்டு மிராண்டிகளின் மொழி தமிழ் என்று கூறிய ஈவெரா, பெரியாரா? – சீமான் கேள்வி!

Next Post

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? – இந்து மக்கள் கட்சி கேள்வி!

Related News

சென்னை ராயபுரம் : நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

புதுக்கோட்டை : 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள வியாக்கபுரீஸ்வரர் கோயில்!

சிவகங்கை : ஆனந்தவல்லி, சோமநாதர் ஆலயத்தில் ஆடித்தபசு தேரோட்ட விழா!

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

Mavrick 440 பைக் விற்பனையை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்!

மின்சார ரயில்களில் கூலி பட போஸ்டர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

காஞ்சிபுரம் : வெள்ளித் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி!

சென்னை : 2 மாதத்திற்கு ரூ.91,993 மின் கட்டணம் : அதிகாரிகளிடம் குடும்பத்தினர் புகார்!

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட அப்டேட்!

உளுந்தூர்பேட்டை : போலீசார் மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை!

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

குஜராத் : காம்பிரா பாலத்தில் சிக்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீட்பு!

ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் சுவாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies