தை அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 29, 2025, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தை அமாவாசையை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில்   தங்களது முன்னோர்களுக்காக பொதுமகக்ள் தர்ப்பணம் கொடுத்தனர்.

மதுரை  வைகை ஆற்றங்கரையில் சிம்மக்கல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

வைகையாற்றின் தென்கரை பகுதிகளான பேச்சியம்மன் படித்துறை, யானைக்கல் தரைப்பாலம், ஆழ்வார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் அளித்து பின்னர் ஆற்றில் புனித நீராடி சென்றனர்.

மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்களும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து சென்றனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் திரளான மக்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கானோர், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து காவிரியில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரைக்குஅதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து எள், மாவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு அவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல்  குற்றாலத்திற்கு திரளான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து அருவிகளில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயில் கடற்கரையில் நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலை முதலே திரண்ட ஏராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடினர். தொடர்ந்து பச்சரிசி, எள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

திருநெல்வேலி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் திரளான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்த நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags: Thai AmavasyaPechiyamman PadithuraiMaduraiTamil Naduvaigai riverwater bodies
ShareTweetSendShare
Previous Post

காட்டு மிராண்டிகளின் மொழி தமிழ் என்று கூறிய ஈவெரா, பெரியாரா? – சீமான் கேள்வி!

Next Post

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? – இந்து மக்கள் கட்சி கேள்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies