தை அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!
Jul 29, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 29, 2025, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தை அமாவாசையை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில்   தங்களது முன்னோர்களுக்காக பொதுமகக்ள் தர்ப்பணம் கொடுத்தனர்.

மதுரை  வைகை ஆற்றங்கரையில் சிம்மக்கல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

வைகையாற்றின் தென்கரை பகுதிகளான பேச்சியம்மன் படித்துறை, யானைக்கல் தரைப்பாலம், ஆழ்வார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் அளித்து பின்னர் ஆற்றில் புனித நீராடி சென்றனர்.

மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்களும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து சென்றனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் திரளான மக்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கானோர், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து காவிரியில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரைக்குஅதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து எள், மாவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு அவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல்  குற்றாலத்திற்கு திரளான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து அருவிகளில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயில் கடற்கரையில் நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலை முதலே திரண்ட ஏராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடினர். தொடர்ந்து பச்சரிசி, எள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

திருநெல்வேலி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் திரளான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்த நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags: Thai AmavasyaPechiyamman PadithuraiMaduraiTamil Naduvaigai riverwater bodies
ShareTweetSendShare
Previous Post

காட்டு மிராண்டிகளின் மொழி தமிழ் என்று கூறிய ஈவெரா, பெரியாரா? – சீமான் கேள்வி!

Next Post

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? – இந்து மக்கள் கட்சி கேள்வி!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies