திம்மம்மா மரிமானு : உலகின் மிகப்பெரிய அதிசய ஆலமரம் - சிறப்பு தொகுப்பு!
Aug 15, 2025, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திம்மம்மா மரிமானு : உலகின் மிகப்பெரிய அதிசய ஆலமரம் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 30, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், மிகப் பழமையான அதே சமயம் அதிசயமான பெரிய ஆலமரம் உள்ளது. திம்மம்மா மரிமானு என்று அழைக்கப்படும் இந்த மரம், உலகின் மிகப்பெரிய ஆலமரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தெலுங்கு மொழியில் ‘மர்ரி’ என்றால் ஆலமரம் என்றும், ‘மனு’ என்றால் மரம் என்றும் பொருள். திம்மம்மா மரிமானு என்பது வரலாற்று சிறப்புமிக்க ஆல மரமாகும். ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் கதிரி நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலமரம் உள்ளது.

இந்த ஆலமரம், சுமார் 19,107 சதுர மீட்டர் பரப்பளவில் நிமிர்ந்து நிற்கிறது. இந்த மரத்தின் நிழலில் 20,000க்கும் அதிகமானோர் தங்கி இளைப்பாற முடியும்.

550 ஆண்டுகள் பழமையான இந்த ஆல மரத்தின் கிளைகளும், விழுதுகளும், 5 ஏக்கர் வரை நிலப்பரப்பில் பரவி உள்ளன. இந்த ஆலமரத்தடியில், இரண்டுக்கு மேற்பட்ட கால்பந்து மைதானங்கள் அமைக்க முடியும்.

இதன் காரணமாகவே,1989ஆம் ஆண்டில் திம்மம்மா மரிமானு ஆலமரம், உலகின் மிகப் பெரிய மரம் என்ற கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளது.

திம்மம்மா ஆலமரத்தின் வலுவான வேர்கள் மண் அரிப்பைத் தடுக்க உதவுகின்றன. பறவைகள், வௌவால்கள், பூச்சிகள் மற்றும் சிறிய பாலூட்டிகள் மற்றும் விலங்குகள் வாழவும் உணவைக் கண்டுபிடிக்கவும் பெரிய கிளைகள் இடமளிக்கின்றன. சுற்றுவட்டார வனவிலங்கு சமூகத்தின் இன்றியமையாத புகலிடமாக இந்த ஆலமரம் விளங்குகிறது.

பழங்காலத்திலிருந்தே உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும், இந்த ஆலமரத்தைத் தெய்வமாகவே பார்க்கின்றனர். இந்த ஆல மரத்தின் வரலாறு கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

15 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த திம்மம்மா என்ற பெண், தனது கணவரின் ஈமச் சடங்கில், உடன்கட்டை ஏறி தனது உயிரைத் தியாகம் செய்தாள். திம்மம்மா சிதை நெருப்பில், ஏறிய அதே இடத்தில் இந்த ஆலமரம் துளிர்விட்டதாக நம்பப்படுகிறது.

இந்த ஆலமரத்தில், திம்மம்மா இருப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர். எனவே தான், இந்த மரம், திம்மம்மா மாரிமானு என வழங்கப்படுகிறது. திம்மம்மா மாரிமனு மரத்தின் கீழ் ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது.தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட திம்மம்மா வாழ்க்கை வரலாறு, கோயில் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை இல்லாத தம்பதிகள் திம்மம்மாவை வந்து வணங்கினால், அடுத்த ஆண்டு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும் தலமாகவும் இந்த ஆலமரம் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா சிவராத்திரிக்கு வந்து வழிபடுகின்றனர்.

திம்மம்மா ஆலமரம், சுற்றுசூழலின் பாதுகாவலாகவும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும் உள்ளது.

Tags: Guinness World Recordsworld's largest tree.Andhra Pradeshlarge banyan treeThimmamma MarimanuKadiriAnantapur district
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத்தில் சுமார் 1,34,000 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி – ஜெய் ஷா பாராட்டு!

Next Post

கன்னியாகுமரி அருகே 120 ஆண்டு கோயிலை இடிக்கப் போவதாக அறிவிப்பு – இந்து அமைப்புகள் எதிர்ப்பு !

Related News

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies