திம்மம்மா மரிமானு : உலகின் மிகப்பெரிய அதிசய ஆலமரம் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திம்மம்மா மரிமானு : உலகின் மிகப்பெரிய அதிசய ஆலமரம் – சிறப்பு தொகுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 30, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், மிகப் பழமையான அதே சமயம் அதிசயமான பெரிய ஆலமரம் உள்ளது. திம்மம்மா மரிமானு என்று அழைக்கப்படும் இந்த மரம், உலகின் மிகப்பெரிய ஆலமரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தெலுங்கு மொழியில் ‘மர்ரி’ என்றால் ஆலமரம் என்றும், ‘மனு’ என்றால் மரம் என்றும் பொருள். திம்மம்மா மரிமானு என்பது வரலாற்று சிறப்புமிக்க ஆல மரமாகும். ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் கதிரி நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலமரம் உள்ளது.

இந்த ஆலமரம், சுமார் 19,107 சதுர மீட்டர் பரப்பளவில் நிமிர்ந்து நிற்கிறது. இந்த மரத்தின் நிழலில் 20,000க்கும் அதிகமானோர் தங்கி இளைப்பாற முடியும்.

550 ஆண்டுகள் பழமையான இந்த ஆல மரத்தின் கிளைகளும், விழுதுகளும், 5 ஏக்கர் வரை நிலப்பரப்பில் பரவி உள்ளன. இந்த ஆலமரத்தடியில், இரண்டுக்கு மேற்பட்ட கால்பந்து மைதானங்கள் அமைக்க முடியும்.

இதன் காரணமாகவே,1989ஆம் ஆண்டில் திம்மம்மா மரிமானு ஆலமரம், உலகின் மிகப் பெரிய மரம் என்ற கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளது.

திம்மம்மா ஆலமரத்தின் வலுவான வேர்கள் மண் அரிப்பைத் தடுக்க உதவுகின்றன. பறவைகள், வௌவால்கள், பூச்சிகள் மற்றும் சிறிய பாலூட்டிகள் மற்றும் விலங்குகள் வாழவும் உணவைக் கண்டுபிடிக்கவும் பெரிய கிளைகள் இடமளிக்கின்றன. சுற்றுவட்டார வனவிலங்கு சமூகத்தின் இன்றியமையாத புகலிடமாக இந்த ஆலமரம் விளங்குகிறது.

பழங்காலத்திலிருந்தே உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும், இந்த ஆலமரத்தைத் தெய்வமாகவே பார்க்கின்றனர். இந்த ஆல மரத்தின் வரலாறு கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

15 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த திம்மம்மா என்ற பெண், தனது கணவரின் ஈமச் சடங்கில், உடன்கட்டை ஏறி தனது உயிரைத் தியாகம் செய்தாள். திம்மம்மா சிதை நெருப்பில், ஏறிய அதே இடத்தில் இந்த ஆலமரம் துளிர்விட்டதாக நம்பப்படுகிறது.

இந்த ஆலமரத்தில், திம்மம்மா இருப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர். எனவே தான், இந்த மரம், திம்மம்மா மாரிமானு என வழங்கப்படுகிறது. திம்மம்மா மாரிமனு மரத்தின் கீழ் ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது.தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட திம்மம்மா வாழ்க்கை வரலாறு, கோயில் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை இல்லாத தம்பதிகள் திம்மம்மாவை வந்து வணங்கினால், அடுத்த ஆண்டு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும் தலமாகவும் இந்த ஆலமரம் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா சிவராத்திரிக்கு வந்து வழிபடுகின்றனர்.

திம்மம்மா ஆலமரம், சுற்றுசூழலின் பாதுகாவலாகவும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும் உள்ளது.

Tags: Andhra Pradeshlarge banyan treeThimmamma MarimanuKadiriAnantapur districtGuinness World Recordsworld's largest tree.
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத்தில் சுமார் 1,34,000 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி – ஜெய் ஷா பாராட்டு!

Next Post

கன்னியாகுமரி அருகே 120 ஆண்டு கோயிலை இடிக்கப் போவதாக அறிவிப்பு – இந்து அமைப்புகள் எதிர்ப்பு !

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies