திம்மம்மா மரிமானு : உலகின் மிகப்பெரிய அதிசய ஆலமரம் - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திம்மம்மா மரிமானு : உலகின் மிகப்பெரிய அதிசய ஆலமரம் – சிறப்பு தொகுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 30, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், மிகப் பழமையான அதே சமயம் அதிசயமான பெரிய ஆலமரம் உள்ளது. திம்மம்மா மரிமானு என்று அழைக்கப்படும் இந்த மரம், உலகின் மிகப்பெரிய ஆலமரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தெலுங்கு மொழியில் ‘மர்ரி’ என்றால் ஆலமரம் என்றும், ‘மனு’ என்றால் மரம் என்றும் பொருள். திம்மம்மா மரிமானு என்பது வரலாற்று சிறப்புமிக்க ஆல மரமாகும். ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் கதிரி நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலமரம் உள்ளது.

இந்த ஆலமரம், சுமார் 19,107 சதுர மீட்டர் பரப்பளவில் நிமிர்ந்து நிற்கிறது. இந்த மரத்தின் நிழலில் 20,000க்கும் அதிகமானோர் தங்கி இளைப்பாற முடியும்.

550 ஆண்டுகள் பழமையான இந்த ஆல மரத்தின் கிளைகளும், விழுதுகளும், 5 ஏக்கர் வரை நிலப்பரப்பில் பரவி உள்ளன. இந்த ஆலமரத்தடியில், இரண்டுக்கு மேற்பட்ட கால்பந்து மைதானங்கள் அமைக்க முடியும்.

இதன் காரணமாகவே,1989ஆம் ஆண்டில் திம்மம்மா மரிமானு ஆலமரம், உலகின் மிகப் பெரிய மரம் என்ற கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளது.

திம்மம்மா ஆலமரத்தின் வலுவான வேர்கள் மண் அரிப்பைத் தடுக்க உதவுகின்றன. பறவைகள், வௌவால்கள், பூச்சிகள் மற்றும் சிறிய பாலூட்டிகள் மற்றும் விலங்குகள் வாழவும் உணவைக் கண்டுபிடிக்கவும் பெரிய கிளைகள் இடமளிக்கின்றன. சுற்றுவட்டார வனவிலங்கு சமூகத்தின் இன்றியமையாத புகலிடமாக இந்த ஆலமரம் விளங்குகிறது.

பழங்காலத்திலிருந்தே உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும், இந்த ஆலமரத்தைத் தெய்வமாகவே பார்க்கின்றனர். இந்த ஆல மரத்தின் வரலாறு கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

15 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த திம்மம்மா என்ற பெண், தனது கணவரின் ஈமச் சடங்கில், உடன்கட்டை ஏறி தனது உயிரைத் தியாகம் செய்தாள். திம்மம்மா சிதை நெருப்பில், ஏறிய அதே இடத்தில் இந்த ஆலமரம் துளிர்விட்டதாக நம்பப்படுகிறது.

இந்த ஆலமரத்தில், திம்மம்மா இருப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர். எனவே தான், இந்த மரம், திம்மம்மா மாரிமானு என வழங்கப்படுகிறது. திம்மம்மா மாரிமனு மரத்தின் கீழ் ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது.தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட திம்மம்மா வாழ்க்கை வரலாறு, கோயில் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை இல்லாத தம்பதிகள் திம்மம்மாவை வந்து வணங்கினால், அடுத்த ஆண்டு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும் தலமாகவும் இந்த ஆலமரம் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா சிவராத்திரிக்கு வந்து வழிபடுகின்றனர்.

திம்மம்மா ஆலமரம், சுற்றுசூழலின் பாதுகாவலாகவும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும் உள்ளது.

Tags: Guinness World Recordsworld's largest tree.Andhra Pradeshlarge banyan treeThimmamma MarimanuKadiriAnantapur district
Share
Tweet
SendShare
Previous Post

அகமதாபாத்தில் சுமார் 1,34,000 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி – ஜெய் ஷா பாராட்டு!

Next Post

கன்னியாகுமரி அருகே 120 ஆண்டு கோயிலை இடிக்கப் போவதாக அறிவிப்பு – இந்து அமைப்புகள் எதிர்ப்பு !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies